செய்திகள் :

பயங்கரவாதத்துக்கு பிரதமரின் பதில்தான் ஆபரேஷன் சிந்தூர்: அமித் ஷா பாராட்டு

post image

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இந்தத் தாக்குதலின் மூலம் இந்திய ராணுவத்தின் செயல்திறனை உலக அரங்குக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் முன்னிறுத்தும் நடவடிக்கையைத்தான் இந்தியா மேற்கொண்டது.

இந்த நிலையில், தில்லியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, ``பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான அரசியல் நிலைத்தன்மை, நமது உளவுத்துறையின் துல்லியமான தகவல்கள் மற்றும் ராணுவத்தின் செயல்திறன் ஆகியவை ஒன்றிணைந்ததுதான் ஆபரேஷன் சிந்தூர். பல ஆண்டுகளாக பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாத அமைப்புகளால், பல்வேறு தாக்குதல்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில், பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து, உரியில் நடத்தப்பட்ட தாக்குதல், புல்வாமா தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. தற்போது, ​​பஹல்காமில், சுற்றுலாப் பயணிகளின் மதத்தைக் கேட்ட பின்னர், அவர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதில்தான், ஆபரேஷன் சிந்தூர்.

இதற்காகவே, இந்தியாவை உலக நாடுகள் பாராட்டுகின்றன. ​​வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய இரண்டு கடினமான எல்லைகளை பாதுகாக்கும் பொறுப்பு, எல்லைப் பாதுகாப்புப் படையிடம் வழங்கப்பட்டது. அந்த உயர்பொறுப்பைக் கருத்தில்கொண்டு, நீங்களும் அதனை மிகச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள்.

பஹல்காமில் மக்களை பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்றதற்கு தகுந்த பதில் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அந்த பதில்தான், இன்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

இப்போது நமது ஆயுதப் படைகளையும் அவர்களின் தாக்குதல் திறன்களையும் முழு உலகமும் பாராட்டுகிறது’’ என்று தெரிவித்தார்.

கேரளம்: பலத்த காற்றுக்கு பறந்து சாலையில் விழுந்த பெரிய இரும்பு கூரை

திருச்சூரில் பலத்த காற்றுக்கு பெரிய இரும்பு கூரை ஒன்று பறந்து சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருச்சூர் நகரில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது ... மேலும் பார்க்க

உ.பி.யில் மழை தொடர்பான சம்பவங்கள் 49 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 49 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மே 21-22 இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வானில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலினால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நில... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களுக்கு 25% வரி? டிரம்ப் அதிரடி!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்கக் கூடாதென அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஆப்பிள்... மேலும் பார்க்க

43 ஆண்டுகள் கழித்து 104 வயதில் விடுதலையான ஆயுள் தண்டனைக் கைதி!

உத்தரப் பிரதேசத்தில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதி ஒருவர் 43 ஆண்டுகள் கழித்து, தனது 104 வயதில் சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.கௌஷம்பி மாவட்டத்தின் கௌராயி கிராமத்தைச் சேர்ந்தவர் லங்கன் (வயது 1... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு இனி அதிக நாள்கள் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு!

பாகிஸ்தான் 75 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டது, இனி அதிக நாள்கள் இல்லை என உத்தரப் பிரதேச முதல்வர் பேசியுள்ளார். அயோத்தியில் ஹனுமான் கதா மண்டபத்தை இன்று (மே 23) திறந்து வைத்தபின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க