செய்திகள் :

43 ஆண்டுகள் கழித்து 104 வயதில் விடுதலையான ஆயுள் தண்டனைக் கைதி!

post image

உத்தரப் பிரதேசத்தில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதி ஒருவர் 43 ஆண்டுகள் கழித்து, தனது 104 வயதில் சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

கௌஷம்பி மாவட்டத்தின் கௌராயி கிராமத்தைச் சேர்ந்தவர் லங்கன் (வயது 104), இவர் கடந்த 1921 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதியன்று பிறந்ததாக அவரது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று, இரண்டு தரப்புக்கு இடையில் உண்டான மோதலில் பிரபு சரோஜ் என்பவர் கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று லங்கன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 3 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதையடுத்து, இந்த வழக்கில் கடந்த 1982-ம் ஆண்டு அவர்கள் நால்வருக்கும் பிரக்யராஜ் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து, சிறையில் அடைத்தது.

இந்நிலையில், அந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் நால்வரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நடைபெற்ற வந்த காலத்திலேயே அவர்களில் மூன்று பேர் காலமாகியுள்ளனர்.

இதையடுத்து, இந்த வழக்கிலிருந்து கடந்த மே 2 ஆம் தேதியன்று, லங்கனை அலகாபாத் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால், கடந்த மே 20 ஆம் தேதியன்று லங்கன் கௌஷம்பி மாவட்ட சிறையிலிருந்து சுமார் 43 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (மே 23) தெரிவித்துள்ளனர்.

104 வயதில் முதியவராக விடுதலைச் செய்யப்பட்டுள்ள அவர் அம்மாவட்டத்தின் ஷரைரா பகுதியில் வசிக்கும் அவரது மகளிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு இனி அதிக நாள்கள் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு!

நடுவானில் பாதிப்புக்குள்ளான இந்திய விமானம்: பாகிஸ்தான் வான்பகுதியில் நுழைய அனுமதி மறுப்பு - விமான போக்குவரத்து இயக்ககம்

புது தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்து நடுவானில் குலுங்கியபோது பாதுகாப்புக்காக பாகிஸ்தான் வான்வழித்தடத்தைப் பயன்படுத்த கேட்டபோது அந... மேலும் பார்க்க

மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் எதிரொலி: இந்தியக் குழுவினா் பயணித்த விமானம் 40 நிமிஷம் தாமதம்

ட்ரோன் தாக்குதலைத் தொடா்ந்து ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், இந்திய நாடாளுமன்றக் குழுவினா் பயணித்த விமானம் வியாழக்கிழமை 40 நிமிஷம் தாமதமானதாக தகவல் அறிந்த வட்டாரங்கள்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு நிதி: பாகிஸ்தானை மீண்டும் கருப்பு பட்டியலில் சோ்க்க இந்தியா தீவிரம்

பாகிஸ்தானை சா்வதேச நிதி நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் (எஃப்ஏடிஃப்) கருப்பு பட்டியலில் மீண்டும் சோ்க்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு முன்பு, 2018-இல் எஃப்ஏடிஎஃப் ‘கிரே’ பட்டியலில் பாகிஸ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை வெளிப்படுத்திய ஆபரேஷன் சிந்தூா்: அமித் ஷா

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடா்ந்து ஆதரவளித்து வருவது ஆபரேஷன் சிந்தூா் மூலம் வெளிப்பட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். எல்லை பாதுகாப்... மேலும் பார்க்க

தொடரும் மாணவா்கள் தற்கொலை: ராஜஸ்தான் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடா்ந்து அதிகரித்து வருவதற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது. ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தோ்வுகளுக்கான... மேலும் பார்க்க

பாஜக அரசின் 100 நாள் சாதனைகள் குறித்த அறிக்கையை வெளியிட திட்டம்

பாஜக அரசு, தில்லியில் தனது 100 நாள் ஆட்சிக் கால சாதனைகள் குறித்த அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. இது தொடா்பாக அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தில்லிய... மேலும் பார்க்க