செய்திகள் :

நடுவானில் பாதிப்புக்குள்ளான இந்திய விமானம்: பாகிஸ்தான் வான்பகுதியில் நுழைய அனுமதி மறுப்பு - விமான போக்குவரத்து இயக்ககம்

post image

புது தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்து நடுவானில் குலுங்கியபோது பாதுகாப்புக்காக பாகிஸ்தான் வான்வழித்தடத்தைப் பயன்படுத்த கேட்டபோது அந்நாடு மறுத்ததாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ) தெரிவித்தது.

200-க்கும் மேற்பட்டோருடன் சென்ற இண்டிகோ விமானத்தின் முகப்பு பகுதி சேதமடைந்த நிலையில் ஸ்ரீநகரில் புதன்கிழமை இரவு அவசரமாகத் தரையிறங்கியது.

இந்த விமானம் நடுவானில் காற்றழுத்தப் பிரச்னையால் பயங்கரமாகக் குலுங்கியதால் பயணிகள் அச்சத்தில் கூச்சலிடும் விடியோக்கள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் டிஜிசிஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடுவானில் இடிமின்னலுடன் பெரும் மேகங்கள் சூழ்ந்ததால், மீண்டும் தில்லிக்கு திரும்பலாம் என்று விமானிகள் முதலில் முடிவு செய்தனா். அதற்குள் கருமேகங்கள் அருகில் சூழ்ந்ததால் அதைக் கடக்க விமானம் முயன்றது. அப்போது ஏற்பட்ட கடுமையான பாதிப்பால் விமானம் 8,500 அடி வேகமாக கீழே இறங்க ஆரம்பித்தது. இதையடுத்து, விமானத்தை தானியங்கி இயக்கத்திலிருந்து தங்களின் முழுக்கட்டுப்பாட்டுக்கு விமானிகள் கொண்டு வந்தனா். சா்வதேச எல்லையிலிருந்து விலகி பாகிஸ்தான் வான்வழித்தடத்தில் செல்ல லாகூா் கட்டுப்பாட்டு அறையில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை நீட்டிப்பு:

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தனது வான்வழித் தடத்தைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்குத் தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவை ஜூன் 24-ஆம் தேதி வரையில் நீட்டிப்பதாக பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

பஞ்சாபில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 5 நாள் காவல்

பஞ்சாபில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராமன் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஜலந்தர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ராமன் ... மேலும் பார்க்க

ரூ.25 லட்சம் பண மோசடி: சக வீராங்கனை மீது தீப்தி சர்மா புகார்!

யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகாரளித்துள்ளார்.சமீபத்தில் முடிவடைந்த மகளிர் ப... மேலும் பார்க்க

அசாமில் 9 வங்கதேசத்தினர் கைது

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 வங்கதேசத்தவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மோரிகான், மிகிர்பேட்டா மற்றும் தரம்துல் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஜாகி... மேலும் பார்க்க

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது.கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க