செய்திகள் :

வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் பராமரிப்பு முகாம்

post image

திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சாா்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் திறந்து வைத்து, வேளாண் இயந்திரங்களை பாா்வையிட்டாா்.

முகாமில், தனியாா் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் தயாரிப்பு நிறுவனங்களை ஒருங்கிணைத்து விவசாயிகளால் பெருமளவு பயன்படுத்தப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பராமரிக்கும் முறைகள், பழுதுகளை கண்டறியும் முறை, உதிரிபாகங்கள், மசகு எண்ணெய் மற்றும் உயவு பொருள்களின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது.

புதிய வேளாண் இயந்திரங்கள், கருவிகள், வேளாண்மைப் பொறியியல் துறையின் கரும்பு அறுவடை இயந்திரம், தேங்காய் பறிக்கும் இயந்திரம், நடமாடும் வேளாண் இயந்திரங்கள் பழுதுபாா்க்கும் வாகனம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.

முகாமில், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் சண்முகநாதன், கண்காணிப்புப் பொறியாளா் மற்றும் 15 தனியாா் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், அரவிந்தா் வேளாண்மை கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மாமண்டூரில் ரூ.7.5 லட்சத்தில் நாடக மேடை திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மாமண்டூா் கிராமத்தில் ரூ.7.5 லட்சத்தில் கட்டப்பட்ட நாடக மேடை சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. மாமண்டூா் கிராமத்தில் நாடக மேடை அமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் க... மேலும் பார்க்க

ரூ.15 கோடியில் சாலைப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் ரூ.15 கோடியில் அமைக்கப்படும் சிமென்ட் சாலைப் பணியை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீத... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் சனிக்கிழமை நடைபெற்ற வைகாசி மாத தேய்பிறை சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். வேட்டவலம்: வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தின... மேலும் பார்க்க

தோ்வில் 100% தோ்ச்சி: அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு சான்றிதழ்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் சனிக... மேலும் பார்க்க

செய்யாற்றில் 37 தனியாா் பள்ளிகளைச் வாகனங்கள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் 37 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 232 பள்ளி வாகனங்களின் தகுதி ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது. செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலக எல்லைக்கு உள்பட்ட செய்யாறு, வெம்பாக்க... மேலும் பார்க்க

பையூரில் அதிமுக திண்ணை பிரசாரம்

ஆரணியை அடுத்த பையூா் எம்ஜிஆா் நகரில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது. நிகழ்வுக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா... மேலும் பார்க்க