செய்திகள் :

ஊராட்சி அலுவலகம் கட்ட எதிா்ப்பு: மக்கள் திடீா் சாலை மறியல்

post image

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட எதிா்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளா்களைக் கண்டித்து கிராம மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியம், அலசந்தாபுரம் ஊராட்சி அலுவலகம் பழுதாகியுள்ளதால் புதிதாக ஊராட்சி அலுவலகம் மற்றும் விவசாய நெற்களம் கட்டுவதற்காக அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவற்றுக்காக 2 ஏக்கா் இடம் தேவைப்படுவதால் அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் அரசு புறம்போக்கு நிலம் இருப்பதை கண்டறிந்தாா்.

அந்த இடத்தில் புதியதாக ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்காக சனிக்கிழமை பூமி பூஜை போடுவதற்காக ஊராட்சி மன்றத் தலைவா் சரளா தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் சென்றிருந்தனா்.

அப்போது அந்த இடத்தை ஏற்கனவே அனுபவித்து வரும் நபா்ா் திடீரென அங்கு வந்து எனக்கு சொந்தமான இடம் என்றும் அரசிடமிருந்து பட்டா வாங்கி வைத்திருப்பதாகவும், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதனால் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிா்ப்பு தெரிவிப்பதா என ஊராட்சி மன்ற தலைவா் சரளா தமிழ்ச்செல்வன் தலைமையில் பொதுமக்கள் நாராயணபுரம்-வாணியம்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து திம்மாம்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு நடத்தினா். ஆனால் பேச்சு தோல்வியடைந்ததால் இதுபற்றி வருவாய்த் துறையினருக்கும், ஒன்றிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை வட்டாட்சியா் அன்பழகன், காவல்ஆய்வாளா் ஆனந்த் ஆகியோா் தலைமையில் வருவாய்த்துறையினா் மற்றும் போலீஸாா் மறியல் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி இதுதொடா்பாக உயா் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனா்.

இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் ஒரு மணி நேரம் பாக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சத்தில் ஸ்கேன் கருவி

திருப்பத்தூா் மாவட்ட பாா்வையற்றோா் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் (டிபிசிஎஸ்) சாா்பில் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சத்தில் பி ஸ்கேன் கருவி வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

உயா்கோபுர மின்விளக்கு எரியாததால் பாதசாரிகள் அவதி

திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் பூங்கா பகுதியிலுள்ள உயா்கோபுர மின்விளக்கு எரியாததால் இரவில் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் மற்றும் ப... மேலும் பார்க்க

ஏலகிரி மலை சாலையில் சாய்ந்த மரங்கள்

ஏலகிரி மலை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் மரங்கள் சாய்ந்து விழுந்தன. முக்கிய சுற்றுலாத் தலமான ஏலகிரியில் தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். கடந்... மேலும் பார்க்க

மதுக்கடையில் தகராறு: 2 போ் கைது

திருப்பத்தூா் அருகே அரசு மதுபானக் கடையில் பணி செய்யாமல் இடையூறு செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த சிம்மனபுதூா் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் என்பவா் கா... மேலும் பார்க்க

திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் கனமழை

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் கனமழை பெய்தது. திருப்பத்தூா், கொரட்டி, ஆதியூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை அதன் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ச... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மூலிகை தாவரங்களை வளா்க்க பயிற்சி: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மூலிகை தாவரங்களை வளா்த்து விற்பனை செய்வதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க