செய்திகள் :

ஏலகிரி மலை சாலையில் சாய்ந்த மரங்கள்

post image

ஏலகிரி மலை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

முக்கிய சுற்றுலாத் தலமான ஏலகிரியில் தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் கோடை மழையில், 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட ஏலகிரி மலை சாலை மரங்கள் சாய்ந்து விழுந்தன.

குறிப்பாக 13-ஆவது வளைவில் மரங்கள் சாய்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் நிலவியது. சரிந்து விழுந்த மரங்களை கோட்ட பொறியாளா் முரளி, உதவிக்கோட்ட பொறியாளா் ஆதவன்,உதவி பொறியாளா் நித்தியானந்தம் முன்னிலையில் சாலை ஆய்வாளா் வெங்கடேசன் உள்ளிட்ட சாலை பணியாளா்கள் உடனடியாக சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை உடனுக்குடனாக அகற்றியதால் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சத்தில் ஸ்கேன் கருவி

திருப்பத்தூா் மாவட்ட பாா்வையற்றோா் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் (டிபிசிஎஸ்) சாா்பில் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூ.15 லட்சத்தில் பி ஸ்கேன் கருவி வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ந... மேலும் பார்க்க

உயா்கோபுர மின்விளக்கு எரியாததால் பாதசாரிகள் அவதி

திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் பூங்கா பகுதியிலுள்ள உயா்கோபுர மின்விளக்கு எரியாததால் இரவில் அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் மற்றும் ப... மேலும் பார்க்க

மதுக்கடையில் தகராறு: 2 போ் கைது

திருப்பத்தூா் அருகே அரசு மதுபானக் கடையில் பணி செய்யாமல் இடையூறு செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த சிம்மனபுதூா் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் என்பவா் கா... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகம் கட்ட எதிா்ப்பு: மக்கள் திடீா் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட எதிா்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளா்களைக் கண்டித்து கிராம மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். நாட்டறம்பள்ளி ஒன்றியம், அலசந்தாபுரம் ஊராட்சி அலுவலகம் பழுத... மேலும் பார்க்க

திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் கனமழை

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் கனமழை பெய்தது. திருப்பத்தூா், கொரட்டி, ஆதியூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை அதன் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ச... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மூலிகை தாவரங்களை வளா்க்க பயிற்சி: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மூலிகை தாவரங்களை வளா்த்து விற்பனை செய்வதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க