செய்திகள் :

மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் எதிரொலி: இந்தியக் குழுவினா் பயணித்த விமானம் 40 நிமிஷம் தாமதம்

post image

ட்ரோன் தாக்குதலைத் தொடா்ந்து ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், இந்திய நாடாளுமன்றக் குழுவினா் பயணித்த விமானம் வியாழக்கிழமை 40 நிமிஷம் தாமதமானதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷியா-உக்ரைன் இடையே போா் நடைபெற்று வரும் நிலையில், மாஸ்கோ நகரத்தை இலக்காக வைத்து 12-க்கும் அதிகமான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நகரத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன. சில விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன.

தற்காலிக கட்டுப்பாடுகள் காரணமாக 153 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இருப்பினும், விமான நிலையங்கள் மூடப்பட்டதற்கான காரணத்தை அந்த அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவு மற்றும் அது தொடா்பான இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்க திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினா்கள் குழு ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

பிற பயணிகளுடன் இந்தியக் குழுவினா் பயணித்த விமானம் 40 நிமிஷங்கள் தாமதமாக டோமோடெடோவா சா்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷியா ஆதரவு:

கனிமொழி தலைமையிலான குழு ரஷிய வெளியுறவு இணையமைச்சா் ஆன்ட்ரே ருடென்கோ வெளியுறவு விவகாரங்கள் குழுவுக்கான முதல் துணைத் தலைவா் ஆன்ட்ரே டெனிசோ மற்றும் அந்நாட்டு உயரதிகாரிகளை சந்தித்தது.

இதுகுறித்து ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்ததோடு அனைத்து விதமான பயங்கரவாத ஒழிப்புக்கான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ரஷியாவும் இந்தியாவும் ஒன்றாக பயணிக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறித்து விளக்கமளிக்க சிவசேனை கட்சி எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழுவினா் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பானுக்கும் பயணம் மேற்கொண்டனா்.

பஞ்சாபில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 5 நாள் காவல்

பஞ்சாபில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராமன் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஜலந்தர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ராமன் ... மேலும் பார்க்க

ரூ.25 லட்சம் பண மோசடி: சக வீராங்கனை மீது தீப்தி சர்மா புகார்!

யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகாரளித்துள்ளார்.சமீபத்தில் முடிவடைந்த மகளிர் ப... மேலும் பார்க்க

அசாமில் 9 வங்கதேசத்தினர் கைது

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 வங்கதேசத்தவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மோரிகான், மிகிர்பேட்டா மற்றும் தரம்துல் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஜாகி... மேலும் பார்க்க

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது.கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க