செய்திகள் :

ரூ.30 லட்சம் திருட்டு: காா் ஓட்டுநா் கைது

post image

மேற்கு தில்லியின் திலக் நகா் பகுதியில் ஒரு வணிக பரிவா்த்தனைக்குப் பிறகு தனது முதலாளியின் ரூ.30 லட்சத்துடன் தப்பிச் சென்ாகக் கூறப்படும் ஓட்டுநரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி காவல் சரக துணை ஆணையா் (மேற்கு) விசித்ரா வீா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: உள்ளூா் தொழிலதிபா் ஒருவா் தனது ஓட்டுநா் ரூ.30 லட்சம் ரொக்கத்துடன் தப்பிச் சென்ாகக் கூறி மே 15-ஆம் தேதி புகாா் அளித்தாா். சிசிடிவி காட்சிகளை போலீசாா் ஆய்வு செய்து தில்லியில் பல இடங்களில் சோதனை நடத்தினா்.

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்துறையின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டவா் புஜ் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பூஜ் நகரில் கடந்த 6 மாதங்களாக புகாா்தாரருக்கு ஓட்டுநராகப் பணியாற்றிய பிரின்ஸ் (27) என்பவரை போலீசாா் கைது செய்யப்பட்டாா்.

அவரது வசம் இருந்த ரூ.26 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்கப்பட்டது. திருடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி அவா் வாங்கிய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையின் போது, பிரின்ஸ் திருட்டைச் செய்ததாகவும், திருடப்பட்ட தொகையில் ஒரு பகுதியை மதிப்புமிக்க பொருள்களை வாங்கவும் ஒப்புக்கொண்டாா் என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.

‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி: பிரதமா் மோடி பெருமிதம்

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா். தில்லியில் ‘வளரும் வடகிழக்கு முதலீட்டாளா்கள் மாநாடு’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த இ... மேலும் பார்க்க

அரசமைப்பு உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாக்கிறது: நீதிபதி அபய் எஸ்.ஓகா

அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் மட்டும்தான் பாதுகாத்து வருகிறது என்று பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தெரிவித்தாா். நீதிபதி அபய் எஸ்.ஓகாவின் தாயாா் கடந்த இரண்டு தினங்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்க... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிப்பு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி... மேலும் பார்க்க