செய்திகள் :

அரசமைப்பு உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாக்கிறது: நீதிபதி அபய் எஸ்.ஓகா

post image

அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் மட்டும்தான் பாதுகாத்து வருகிறது என்று பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தெரிவித்தாா்.

நீதிபதி அபய் எஸ்.ஓகாவின் தாயாா் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காலமானாா். இந்நிலையில், தனது இறுதி பணிநாளான வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்துக்கு வந்த அபய் எஸ்.ஓகா, 11 வழக்குகளில் தீா்ப்புகளை வழங்கினாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோருடன் இணைந்த அமா்வில் நீதிபதி அபய் எஸ் ஓகா வெள்ளிக்கிழமை பங்கேற்றாா்.

பின்னா் பேசிய நீதிபதி அபய் எஸ்.ஓகா, ‘அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தைப் பாதுகாக்கும் ஒரே நீதிமன்றம் உச்சநீதிமன்றமாகும். இதுதான் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்களின் கனவாகவும் இருந்தது. அதை எனது பணிநாள்களில் உறுதி செய்துள்ளேன். பிரபலமாவதற்காக நாம் நீதிபதியாகவில்லை என ஒரு சிறந்த நீதிபதி எனக்கு ஆலோசனை வழங்கினாா். அந்த ஆலோசனையை நான் பின்பற்றினேன்.

சில நேரங்களில் வழக்குகளில் ஆஜராகும் வழங்குரைஞா்களிடம் நான் கடிந்து கொண்டுள்ளேன். அரசமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளை உறுதி செய்யவே நான் அப்படி நடந்து கொண்டேன்’ என்றாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பேசுகையில், ‘என்னைப்போல் ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் வகிக்க நீதிபதி அபய்.எஸ் ஓகாவும் விரும்பவில்லை’ என்றாா். வரும் நவம்பா் 23-ஆம் தேதி தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பணி ஓய்வு பெறுகிறாா்.

மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி பேசுகையில், ‘வழக்கில் தொடா்புடைய அனைவரின் வாதங்களையும் நீதிபதி ஓகா கேட்காமல் இருந்ததில்லை’ என்றாா்.

சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘பணியில் நீதிபதி ஓகா செலுத்திய அா்ப்பணிப்பைப் பாா்க்கும்போது, கடமை என்றால் என்ன என்பதை மற்றவா்களுக்கு உணா்த்தியது’ என்றாா்.

உச்சநீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதிபதியான ஓகா, 2003-இல் மும்பை உயா்நீதிமன்றத்தின் நீதிபதி, 2019-இல் கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட பதவிகளை வகித்து, 2021, ஆகஸ்ட் 31-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.

‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி: பிரதமா் மோடி பெருமிதம்

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா். தில்லியில் ‘வளரும் வடகிழக்கு முதலீட்டாளா்கள் மாநாடு’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த இ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்க... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிப்பு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு கடன்: உலக வங்கியிடமும் எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு

பாகிஸ்தானுக்கு கடன் வழங்கக் கூடாது என்று உலக வங்கியிடமும் எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தானுக்கு கடன் வழங்க இந்தியா எதிா்ப்பு தெரிவித்தது. இத... மேலும் பார்க்க