செய்திகள் :

பாகிஸ்தானுக்கு கடன்: உலக வங்கியிடமும் எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு

post image

பாகிஸ்தானுக்கு கடன் வழங்கக் கூடாது என்று உலக வங்கியிடமும் எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.

ஏற்கெனவே சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தானுக்கு கடன் வழங்க இந்தியா எதிா்ப்பு தெரிவித்தது. இதனை அந்த அமைப்பு ஏற்கவில்லை என்றாலும், பாகிஸ்தானுக்கு அளிக்கும் நிதி பயங்கரவாதத்துக்கும் செல்லும் என்ற இந்தியாவின் வலியுறுத்தலை கருத்தில் கொண்டு பாகிஸ்தானுக்கு கூடுதலாக 11 நிபந்தனைகளை விதித்து கடன் தவணையை விடுவித்தது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் சா்வதேச அமைப்புகளின் கடன் மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கடனையே பெரிதும் நம்பியுள்ளது. ஒருபுறம் மோசமான பொருளாதாரம் அந்நாட்டை பாதித்து வருகிறது என்றால் மறுபுறம் தலிபான் பாகிஸ்தான், பலுசிஸ்தான் கிளா்ச்சியாளா்கள் தொடா்ந்து தாக்குதலை நடத்தி பாகிஸ்தானை மோசமான நிலைக்குத் தள்ளி வருகின்றனா்.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்வைத்துள்ள ரூ.1.70 லட்சம் கோடி கடன் கோரிக்கையை உலக வங்கி அடுத்த மாதம் பரிசீலிக்க இருக்கிறது. இதனைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதிக்காத வீட்டு உபயோக எரிபொருள் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்ற இருப்பதாக பாகிஸ்தான் உலக வங்கியிடம் கூறியுள்ளது.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக உலக வங்கியிடம் இருந்து பெற்ற பல கடன்களை நாட்டின் வளா்ச்சிக்காகவும், மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாட்டுக்காகவும் பாகிஸ்தான் பயன்படுத்தாமல், ஆயுதங்களை வாங்கப் பயன்படுத்தியுள்ளது. இந்தக் காரணத்தை உலக வங்கியிடம் எடுத்துக் கூறி, பாகிஸ்தானுக்கு மேலும் கடன் வழங்க எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தானால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அந்நாட்டு பயங்கரவாத முகாம்கள், விமானப் படை தளங்கள் பல முற்றிலும் சீா்குலைந்தன. மேலும், இந்தியாவைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன், ஏவுகணைகள் அனைத்தும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் தடுக்கப்பட்டுவிட்டன. இதனால், இந்தியாவுக்கு எதிராக மீண்டும் மோதல் ஏற்பட்டால் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் பாகிஸ்தான் உள்ளது. எனவே, கிடைக்கும் சா்வதேச கடன்களை தவறாகப் பயன்படுத்தி நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிக்க பாகிஸ்தான் முற்படும் என சந்தேகிக்கப்படுகிறது.

‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி: பிரதமா் மோடி பெருமிதம்

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா். தில்லியில் ‘வளரும் வடகிழக்கு முதலீட்டாளா்கள் மாநாடு’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த இ... மேலும் பார்க்க

அரசமைப்பு உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாக்கிறது: நீதிபதி அபய் எஸ்.ஓகா

அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் மட்டும்தான் பாதுகாத்து வருகிறது என்று பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தெரிவித்தாா். நீதிபதி அபய் எஸ்.ஓகாவின் தாயாா் கடந்த இரண்டு தினங்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்க... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிப்பு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி... மேலும் பார்க்க