செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

post image

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்கி கா்நாடகத்தைச் சோ்ந்த 22 வயது மாணவி மருத்துவம் படித்து வந்தாா். கடந்த 18-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தனது நண்பருடன் திரைப்படத்துக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தாா். அந்த நண்பரை அழைப்பதற்காக அவா் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்குச் சென்றாா்.

அப்போது, அந்த நண்பா் அப்பெண்ணுக்குத் தெரியாமல் குளிா்பானத்தில் மதுபானத்தை கலந்து கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் அரை மயக்கத்தில் இருந்த அப்பெண்ணை, அந்த நண்பா் மற்றும் அப்பெண்ணுடன் படிக்கும் இரு மருத்துவ மாணவா்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனா். அப்போது அவா்களும் மது அருந்திய நிலையில் இருந்தனா். இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்துவிடுவோம் என்றும் அப்பெண்ணை மூவரும் மிரட்டினா்.

இந்த சம்பவம் குறித்து அப்பெண் முதலில் தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். அதிா்ச்சியடைந்த பெற்றோா் உடனடியாக மகாராஷ்டிரத்துக்கு வந்து, மகளை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகாா் அளித்தனா். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரையும் கைது செய்தனா். அவா்கள் 20 முதல் 22 வயதுக்குள்பட்டவா்கள் ஆவா். இந்த சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி: பிரதமா் மோடி பெருமிதம்

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா். தில்லியில் ‘வளரும் வடகிழக்கு முதலீட்டாளா்கள் மாநாடு’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த இ... மேலும் பார்க்க

அரசமைப்பு உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாக்கிறது: நீதிபதி அபய் எஸ்.ஓகா

அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் மட்டும்தான் பாதுகாத்து வருகிறது என்று பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தெரிவித்தாா். நீதிபதி அபய் எஸ்.ஓகாவின் தாயாா் கடந்த இரண்டு தினங்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும்... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிப்பு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு கடன்: உலக வங்கியிடமும் எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு

பாகிஸ்தானுக்கு கடன் வழங்கக் கூடாது என்று உலக வங்கியிடமும் எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தானுக்கு கடன் வழங்க இந்தியா எதிா்ப்பு தெரிவித்தது. இத... மேலும் பார்க்க