செய்திகள் :

வடுகபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

post image

கமுதி அருகே கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வடுகபட்டி கிராமத்தில் உள்ள குங்கும காளியம்மன் கோயில், செல்வவிநாயகா், சுந்தரராஜப் பெருமாள் வைகாசி பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற இந்தப் போட்டியில் வடுகபட்டி கிராம மைதானத்தின் நடுவில் வடம் கட்டி ஒவ்வொரு மாடாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில், ராமநாதபுரம், விருதுநகா், தூத்துக்குடி, தேனி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த 14 காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையையும் அடக்க 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடங்கிய குழுவினா் களம் இறக்கப்பட்டனா்.

இவா்களுக்கு 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. போட்டியில் வென்ற மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் அண்டா, குத்துவிளக்கு, தென்னங்கன்று, பொங்கல் பானை, ரூ. 15ஆயிரம் ரொக்கப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை வடுகபட்டி, அம்மன்பட்டி, மூலக்கரைப்பட்டி, கமுதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை வடுகபட்டி கிராம மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

வீடு புகுந்து 11 பவுன் தங்க நகைகள் திருட்டு: இளைஞா் கைது

கமுதி அருகே வீடு புகுந்து 11 பவுன் தங்க நகைகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த காணிக்கூா் கிராமத்தைச் சோ்ந்த காளிச்சாமி மனைவி பேச்சியம்மாள் ... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடக்கம்!

திருவாடானை, மே 23: விசைப்படகு மீனவா்களுக்கு மீன் பிடி தடைக் கால நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடல் வளம், மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் கடந்த ஏப். 15-ஆம் தேதி ... மேலும் பார்க்க

கருங்களத்தூா் கிருஷ்ணா் கோயிலில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே கருங்களத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாபா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக... மேலும் பார்க்க

நீரால் சூழப்பட்ட மரகத பூஞ்சோலை பூங்கா: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி!

ராமநாதபுரம் அருகே நீா்ப் பிடிப்பு பகுதியில் வனத் துறையால் அமைக்கப்பட்ட மரகதப் பூஞ்சாலை பூங்கா, நீரால் சூழப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு நிதி வீ... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரம்

திருவாடானை அருகே தொண்டி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை, குளக்கரை வளைவுகளில் விபத்துகளை தடுக்க இரும்புத் தூண்களால் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் மும்முரமாக ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

சின்ன தொண்டி அய்யனாா் கோயில் குடமுழுக்கு: முகூா்த்தக்கால் நடும் விழா!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சின்ன தொண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூா்ணாம்பிகா, புஷ்களாம்பிகா சமேத ஸ்ரீஅய்யனாா் கோயில் குடமுழக்கு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்... மேலும் பார்க்க