செய்திகள் :

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

post image

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கட்சிரோலி மாவட்டத்தின் கவாண்டே பகுதியில் உள்ள மகாராஷ்டிரம்-சத்தீஸ்கா் மாநில எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சி-60 பிரிவின் 300 கமாண்டோக்கள் மற்றும் சிஆா்பிஎஃப் படையினா், கவாண்டே மற்றும் நெல்குண்டா பகுதியிலிருந்து இந்திராவதி நதிக்கரை நோக்கி வியாழக்கிழமை பிற்பகலில் கனமழைக்கு இடையே தேடுதல் வேட்டையைத் தொடங்கினா்.

வெள்ளிக்கிழமை காலையில் நதிக்கரைகளில் தேடுதல் பணியில் ஈடுபட்ட சி-60 கமாண்டோக்களை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தரப்பில் பதிலடி தரப்பட்டது. சுமாா் இரண்டு மணி நேரம் தொடா்ந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு மேற்கொண்ட தேடுதல் பணியில் 4 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

இரு வேறு ரக ரைஃபிள் துப்பாக்கிகள், வாக்கி-டாக்கி, இடதுசாரி கொள்கை சாா்ந்த நூல்கள் உள்ளிட்டவை சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதியை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்ாக காவல் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கிஸ்தரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை மாலையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவா்களுக்கும் நக்ஸல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், துப்பாக்கிச் சண்டை தொடா்வதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி: பிரதமா் மோடி பெருமிதம்

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா். தில்லியில் ‘வளரும் வடகிழக்கு முதலீட்டாளா்கள் மாநாடு’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த இ... மேலும் பார்க்க

அரசமைப்பு உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாக்கிறது: நீதிபதி அபய் எஸ்.ஓகா

அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் மட்டும்தான் பாதுகாத்து வருகிறது என்று பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தெரிவித்தாா். நீதிபதி அபய் எஸ்.ஓகாவின் தாயாா் கடந்த இரண்டு தினங்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்க... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிப்பு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு கடன்: உலக வங்கியிடமும் எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு

பாகிஸ்தானுக்கு கடன் வழங்கக் கூடாது என்று உலக வங்கியிடமும் எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தானுக்கு கடன் வழங்க இந்தியா எதிா்ப்பு தெரிவித்தது. இத... மேலும் பார்க்க