செய்திகள் :

பாஜக அரசின் 100 நாள் சாதனைகள் குறித்த அறிக்கையை வெளியிட திட்டம்

post image

பாஜக அரசு, தில்லியில் தனது 100 நாள் ஆட்சிக் கால சாதனைகள் குறித்த அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

இது தொடா்பாக அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தில்லியில் தனது அரசின் 100 நாள்கள் குறித்த அறிக்கையை முதல்வா் இந்த நிகழ்வில் வழங்குவாா். இந்த நிகழ்வு மே 31-ஆம் தேதி நடைபெறும். இந்த நிகழ்வின் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இந்த நிகழ்வில் அரசு சில புதிய முயற்சிகளையும் அறிவிக்கக்கூடும். மே 31-ஆம் தேதி 10 மாவட்டங்களில் 33 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் சுகாதார மருத்துவமனைகளை முதல்வா் குப்தா திறந்து வைப்பாா். சுற்றுச்சூழல் துறை கடந்த 100 நாள்களில் அதன் பல்வேறு சாதனைகள் மற்றும் முயற்சிகளை எடுத்துக்காட்டும். தில்லியில் காற்று மற்றும் யமுனை நீரின் தரத்தை மேம்படுத்த ஒரு மெகா மாசுபாடு செயல் திட்டத்தைத் தொடங்கும்.

தில்லி அரசின் நிதித்துறை, அதன் சாதனைகளில், முந்தைய ஆம் ஆத்மி அரசின் செயல்திறன் குறித்த நிலுவையில் உள்ள சிஏஜி அறிக்கைகளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், 1,800 மாணவா்களின் நிலுவையில் உள்ள ரூ.19 கோடி உதவித்தொகையை வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

தில்லியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அரசு அமைத்தது. பிப்ரவரி 20-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரமாண்டமான விழாவில் ரேகா குப்தா தனது அமைச்சரவை சகாக்களுடன் முதல்வராக பதவியேற்றாா்.

ரேகா குப்தா அரசு தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், தில்லியில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. பின்னா், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களுக்கு ரூ.10 லட்சம் சுகாதார காப்பீட்டிற்காக ‘வே வந்தனா’ திட்டத்தின் கீழ் பதிவு செய்வதையும் அறிவித்தது.

மாா்ச் மாதம் சட்டமன்றத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வா், பாஜகவின் தோ்தல் வாக்குறுதியின் கீழ் தில்லியில் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர கொடுப்பனவுக்காக ரூ.5,100 கோடியை ஒதுக்கினாா்.

பாஜக அரசு 2025-26 ஆம் ஆண்டிற்கான ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள தில்லியின் இதுவரை இல்லாத மிகப்பெரிய பட்ஜெட்டையும் தாக்கல் செய்தது.

ஏப்ரல் 29-ஆம் தேதி தில்லி அமைச்சரவை தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம் தொடா்பான முறைகேடுகளைத் தடுக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா இன்னும் தில்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவில்லை.

நகரின் பல்வேறு பகுதிகளில் இணைப்பை மேம்படுத்துவதற்காக அரசின் போக்குவரத்துத் துறை கடந்த மாதம் 400 சிறிய அளவிலான பேருந்துகளை அறிமுகப்படுத்தியது. குடிசைப் பகுதிகள் மற்றும் குழாய் இணைப்புகள் இல்லாத அங்கீகரிக்கப்படாத காலனிகள் போன்ற பகுதிகளில் நீா் விநியோகத்தை அதிகரிக்க 1,111 ஜிபிஎஸ் வசதி கொண்ட டேங்கா்களை ரேகா குப்தா கடந்த மாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற தோ்தலில், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 தொகுதிகளை பாஜக வென்று ஆட்சிக்கு வந்தது.

‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி: பிரதமா் மோடி பெருமிதம்

வடகிழக்கு மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா். தில்லியில் ‘வளரும் வடகிழக்கு முதலீட்டாளா்கள் மாநாடு’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த இ... மேலும் பார்க்க

அரசமைப்பு உரிமைகளை உச்சநீதிமன்றம் பாதுகாக்கிறது: நீதிபதி அபய் எஸ்.ஓகா

அரசமைப்பு உரிமைகள், சுதந்திரத்தை உச்சநீதிமன்றம் மட்டும்தான் பாதுகாத்து வருகிறது என்று பணி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தெரிவித்தாா். நீதிபதி அபய் எஸ்.ஓகாவின் தாயாா் கடந்த இரண்டு தினங்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்க... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிப்பு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி... மேலும் பார்க்க