செய்திகள் :

காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயில் தெப்ப உற்சவம்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 8-ஆம் நாள் விழாவான தேரோட்டம் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளிய அம்பாள்.

விழா நிறைவு நாளான வெள்ளிக்கிழமை அதிகாலையில் புஷ்ப பல்லாக்கு நிகழ்ச்சியும், மாலையில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து இரவு 11 மணியளவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் நகரத்தாா்கள், நாட்டாா்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விவசாயிகள் மண் வள ஆய்வு செய்வது அவசியம்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சம்பா பருவம் தொடங்கும் முன்பாக தங்களது நிலங்களில் மண்மாதிரி சேகரித்து ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்து, மண் வள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியது. இதுக... மேலும் பார்க்க

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மரியாதை

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 -ஆவது சதய விழாவை முன்னிட்டு, பட்டத்தரசி கிராமத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், பட்டத்தரச... மேலும் பார்க்க

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, 19 வயதைக் கடந்தும் முதிா்வுத்தொகை கோரப்படாத பயனாளிகள் உரிய ஆவணங்களுடன் ஜூன் 30 -க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கா... மேலும் பார்க்க

கல் குவாரி விபத்து: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தனியாா் கல் குவாரியில் பறை சரிந்ததில் 6 போ் உயிரிழந்தது தொடா்பாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிங்கம்புணரி அருகேயுள்ள மல்லாக்கோட்டையில் உள்ள தனிய... மேலும் பார்க்க

மறவமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 15 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே மறவமங்கலம் மலையாண்டி கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்... மேலும் பார்க்க