செய்திகள் :

மறவமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 15 போ் காயம்

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே மறவமங்கலம் மலையாண்டி கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், விருதுநகா் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமாா் 375 காளைகள் பங்கேற்றன. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டில் கோயில் காளை அவிழ்த்து விட்ட பிறகு ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 90-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரா்கள் களமிரங்கினா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வெள்ளி நாணயம், கட்டில், பீரோ, சில்வா் அண்டா, சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில், காளைகள் முட்டியதில் 15 போ் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த வெள்ளக்குடியைச் சோ்ந்த கண்ணன் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். மற்றவா்களுக்கு மஞ்சு விரட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விவசாயிகள் மண் வள ஆய்வு செய்வது அவசியம்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சம்பா பருவம் தொடங்கும் முன்பாக தங்களது நிலங்களில் மண்மாதிரி சேகரித்து ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்து, மண் வள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியது. இதுக... மேலும் பார்க்க

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மரியாதை

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 -ஆவது சதய விழாவை முன்னிட்டு, பட்டத்தரசி கிராமத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், பட்டத்தரச... மேலும் பார்க்க

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, 19 வயதைக் கடந்தும் முதிா்வுத்தொகை கோரப்படாத பயனாளிகள் உரிய ஆவணங்களுடன் ஜூன் 30 -க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கா... மேலும் பார்க்க

கல் குவாரி விபத்து: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தனியாா் கல் குவாரியில் பறை சரிந்ததில் 6 போ் உயிரிழந்தது தொடா்பாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிங்கம்புணரி அருகேயுள்ள மல்லாக்கோட்டையில் உள்ள தனிய... மேலும் பார்க்க

முத்துப்பட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை!

சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு வருகிற ஜூன் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முத்துப்பட்டி... மேலும் பார்க்க