செய்திகள் :

ஓடும் பேருந்தில் நெஞ்சு வலி; ஸ்டியரிங்கில் சாய்ந்த ஓட்டுநர்; நொடிகளில் பயணிகளை காப்பாற்றிய நடத்துனர்

post image

ஓடிக்கொண்டிருந்த தனியார் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட, சாதுரியமாகச் செயல்பட்டு கையால் பிரேக் பிடித்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நடத்துனரின் செயல், கவனம் பெற்றிருக்கிறது.

சம்பவம் நடந்த பேருந்து

திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பிரபு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இன்று பழனியிலிருந்து கிளம்பிய பேருந்து கணக்கன்பட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநர் பிரபுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஸ்டியரிங்கில் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி கூச்சலிட்டதை கண்டு, நடத்துநர் உடனடியாக டிரைவர் அருகே வந்து நிலைமையை புரிந்துகொண்டு சாதுரியமாக செயல்பட்டு பிரேக்கை கையால் அழுத்தி பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால் பெரும் விபத்து ஏற்படவிருந்தது, நடத்துனரின் செயலால் தடுக்கப்பட்டது. பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.

அதன் பின்பு ஸ்டியரிங்கில் விழுந்திருந்த ஓட்டுநர் பிரபுவை உடனடியாக அங்கிருந்து மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பேருந்தில் இறந்த ஓட்டுநர்

ஆயக்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி விபத்தில் பலி - ஊட்டி மலைப்பாதையில் கோரம்

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்ய பிரியா (29). இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின், மகள் வழி பேத்தி ஆவார். திவ்யாவுக்கு திருமணமாகி கார்த்திக் (வயது 30) என்கிற கணவர் உள்ளா... மேலும் பார்க்க

தெலங்கானா: பிறந்த குழந்தை மீது போதையில் படுத்த தந்தை; பதறிப்போன தாய்; குழந்தைக்கு நேர்ந்த சோகம்

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கானாபூர் அருகில் உள்ள சீமல்பல்லி என்ற இடத்தில் வசிப்பவர் சேகர்(22). கூலித்தொழிலாளியான சேகர் மனைவி சுஜாதாவிற்குக் கடந்த 28 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தி... மேலும் பார்க்க

`சாலையில் 20 அடி குழி; விழுந்து தம்பதி உயிரிழப்பு' - ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள சேர்வைக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). பழவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். நாகராஜ் மனைவி ஆன... மேலும் பார்க்க

ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம்; பயணிகள் அலறல்.. பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி

டெல்லியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று ஸ்ரீநகருக்கு புறப்பட்டது 6E2142 என்ற இண்டிகோ விமானம். அந்த விமானத்திலிருந்து பயணிகளில் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. அந்த வீ... மேலும் பார்க்க

சிவகங்கை பயங்கரம் : கல் குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு; சோகத்தில் மக்கள்

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் மேகா புளு மெட்டல் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் விதிமீறல்கள் நடப்பதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்து வந்துள்ளத... மேலும் பார்க்க

Sunset: சூரியன் மறைவதை போட்டோ எடுக்க முயன்ற மாணவி; 7-வது மாடியில் தவறி கீழே விழுந்து மரணம்

மும்பை தகிசர் கிழக்கு பகுதியில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் வசித்தவர் மாணவி ஜான்வி (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10-வது வகுப்பு படித்து வந்தார். ஜான்வி மாலை நேரத்தில் தனது தந்தையுடன் நடைபயிற்சி சென்றபோ... மேலும் பார்க்க