செய்திகள் :

மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டியதால் 3 பேர் பலி!

post image

ராமநாதபுரத்தில் மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டியதில் 3 பலியாகக் காரணமான ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் செல்லபாண்டியன் என்பவர் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில், மதுபோதையில் ஆட்டோவை ஓட்டிய நிலையில், பசும்பொன் புறநகர் பகுதியில் எதிரே வந்த போலீஸ் வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த 3 பேர் பலியாகினர்.

இதனையடுத்து, மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுர மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து, மதுரை அமர்வு நீதிமன்றத்தில் செல்லபாண்டியன் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இவரின் மனுவை விசாரித்த நீதிமன்றம், மதுபோதையில் வாகனம் ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறியது. மேலும், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் உறுதிப்படுத்தியது.

தொடர்ந்து, நீதிமன்றம் தெரிவித்ததாவது, ஷேர் ஆட்டோக்களின் விதிமீறல்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஷேர் ஆட்டோக்களில் அதிகளவில் பயணிகள் ஏற்றப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆட்டோவின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக, மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியது.

தனித்துப் போட்டி: என்னவாகும் சீமானின் வாக்குகள்?

பேரவைத் தோ்தலில் மீண்டும் தனித்துப் போட்டி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ள நிலையில், விஜய் கட்சியின் வரவால் நாம் தமிழா் கட்சியின் வாக்கு வங்கி என்னவாகும் என்பது அர... மேலும் பார்க்க

ஐபிஎல் பெயரில் சூதாட்டம் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஐபிஎல் கிரிக்கெட் மையமாகவைத்து சூதாட்டமும், பந்தயம் கட்டி விளையாடுவதும் அதிகரித்துவிட்டது என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், இது தொடா்பாக மத்திய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நோட்ட... மேலும் பார்க்க

இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்: இளைஞா் சிக்கினாா்

சென்னையில் இளம் பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். மணிப்பூரை சோ்ந்த ஒரு 19 வயது இளம் பெண், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அள... மேலும் பார்க்க

பாலியல் புகாா்: மருத்துவப் பேராசிரியா் பணியிடை நீக்கம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பொன்னையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.... மேலும் பார்க்க

வங்கியில் ரூ.72.55 லட்சம் கடன் பெற்று மோசடி: தேடப்பட்டவா் கைது

சென்னை அடையாறில் வங்கியில் ரூ. 72.55 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அடையாறில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளராகப் பணியாற்றுப... மேலும் பார்க்க

பெரும்பிடுகு முத்தரையருக்கு தவெக: தலைவா் விஜய் புகழாரம்

போருக்குச் செல்லும் முன்பே தனது வெற்றியை உறுதிசெய்யும் வகையில் மாமன்னா் பெரும்பிடுகு முத்தரையா், வாகை மலா் சூடி போருக்குச் சென்றதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் புகழாரம் சூட்டினாா். மன்னா் பெரும்... மேலும் பார்க்க