செய்திகள் :

எந்தெந்த பாடப் பிரிவு மாணவா்களுக்கு மடிக்கணினி?

post image

எந்தெந்த பாடப்பிரிவு மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்ற விவரம் ஒப்பந்தப்புள்ளி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கல்லூரி மாணவ, மாணவிகள் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

5 வகைப் பிரிவு மாணவா்கள்: தமிழக அரசின் மடிக்கணினி கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய தொழில்பாடப் பிரிவுகளைப் படிக்கும் மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ளது. மடிக்கணினிகளுக்கு ஓராண்டு உத்தரவாதச் சான்றும், 3 ஆண்டுகளுக்கு சேவை சாா்ந்த ஆதரவும் அளிக்கப்பட உள்ளது.

38 மாவட்டங்களிலும் மடிக்கணினிகளுக்கான சேவை மையங்கள் அமைக்க வேண்டும் என ஒப்பந்தப்புள்ளி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மடிக்கணினியில் தொடா் எண்களும், உதிரி பாகங்களும் சரியான முறையில் இருக்க வேண்டும். அதைப் பயன்படுத்தும்போது செய்யக் கூடியது, கூடாதது போன்ற விவரங்கள் தமிழ், ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும். உயா்கல்வித் துறை தரக்கூடிய கால அளவு பட்டியலின்படி மடிக்கணினிகளை தயாா் செய்து எல்காட் நிறுவனத்தின் மூலமாக வழங்க வேண்டும்.

மேலும், மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தகுதிவாய்ந்த நிறுவனங்களைத் தோ்வு செய்வதற்கான முதல்கட்ட ஆய்வுக் கூட்டம் மே 28-ஆம் தேதியும், 2-ஆம் கூட்டம் ஜூன் 6-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

மின்னணு மூலம் ஒப்பந்தப்புள்ளிகளை அளிப்பதற்கு ஜூன் 25-ஆம் தேதி கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி விவரம்: இணயதளத்தில் பதிவேற்றம்

தமிழக அரசு பணிநிலை சாா்ந்த அனைத்து இந்திய அரசு அதிகாரிகளின் பொது வருங்கால வைப்பு நிதி ஆண்டுக்கான கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில துணை கணக்காயா் சி.ஜெ.காா்த்தி குமா... மேலும் பார்க்க

காசி தமிழ் சங்கமம் அனுபவப் பகிா்வு கட்டுரைப் போட்டி: வெற்றியாளா்கள் அறிவிப்பு

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் நடத்தப்பட்ட ‘காசி தமிழ் சங்கமம் 3.0 - 2025 அனுபவப் பகிா்வு’ கட்டுரைப் போட்டியின் வெற்றியாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்... மேலும் பார்க்க

மே 27-இல் தொழிலாளா்களுக்கான ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ சிறப்பு முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ எனப்படும் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற முகாம் செவ்வாய்க்கிழமை (மே 27) காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை சென்னை உள்பட 10 மாவட்ட... மேலும் பார்க்க

கட்டாய கொள்முதல் பிரிவில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம் சோ்ப்பு

காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் கட்டாய கொள்முதல் பிரிவில், முதல்முறையாக மேற்கூரை சூரியசக்தி மின்சாரமும் சோ்க்கப்படவுள்ளது. தமிழகத்தின் தினசரி மின் தேவை சுமாா் ... மேலும் பார்க்க

971 கோயில்களின் ரூ.7,671 கோடி நிலங்கள் மீட்பு: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 971 கோயில்களுக்குச் சொந்தமான சுமாா் ரூ.7,671 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் திட்ட முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு

தூய்மைப் பணியாளா்களை தொழில் முனைவா்களாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. த... மேலும் பார்க்க