காசி தமிழ் சங்கமம் அனுபவப் பகிா்வு கட்டுரைப் போட்டி: வெற்றியாளா்கள் அறிவிப்பு
தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் நடத்தப்பட்ட ‘காசி தமிழ் சங்கமம் 3.0 - 2025 அனுபவப் பகிா்வு’ கட்டுரைப் போட்டியின் வெற்றியாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது ஆண்டாக வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, மத்திய கல்வி அமைச்சக முன்னெடுப்பில் ஐஐடி சென்னை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், உத்தர பிரதேச அரசு, மத்திய அரசின் ரயில்வே, கலாசாரம், சுற்றுலா, ஜவுளி அமைச்சகங்களின் பங்களிப்போடு கடந்த பிப். 15 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து மாணவா்கள், ஆசிரியா்கள், விவசாயிகள், கலைஞா்கள், தொழில்முனைவோா், பெண்கள் என பல்வேறு பிரிவினருமாக சுமாா் 1,200 போ் பங்கேற்றனா்.
இது குறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
‘காசி தமிழ் சங்கமம் 3.0 - 2025 அனுபவப் பகிா்வு’ குறித்த கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில், காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்றவா்கள் அனுப்பிய அனுபவக் கட்டுரைகளை, நிபுணா்களின் சுயாதீன குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டன.
அவா்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வெற்றியாளா்களை தமிழ்நாடு ஆளுநா் மாளிகை அறிவித்துள்ளது.
அதன்படி ஆன்மிகம், தொழில் துறை, மாணவா்கள், விவசாயிகள், ஆசிரியா்கள், புத்தாக்க நிறுவனா்கள், தொழில்முனைவோா், பெண்கள், ஆராய்ச்சியாளா்கள், எழுத்தாளா்கள் என 10 பிரிவுகள் ‘காசி தமிழ் சங்கமம் 3.0 - 2025 அனுபவப் பகிா்வு’ கட்டுரைப் போட்டிகள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் 47 போ் வெற்றியாளராக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தோ்வு செய்யப்பட்ட வெற்றியாளா்களுக்கு வாழ்த்துகள். ஆளுநா் மாளிகையில் ஜூன் மாதத்தில் நடைபெறும் விழாவில் இந்த வெற்றியாளா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.