செய்திகள் :

காசி தமிழ் சங்கமம் அனுபவப் பகிா்வு கட்டுரைப் போட்டி: வெற்றியாளா்கள் அறிவிப்பு

post image

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் நடத்தப்பட்ட ‘காசி தமிழ் சங்கமம் 3.0 - 2025 அனுபவப் பகிா்வு’ கட்டுரைப் போட்டியின் வெற்றியாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது ஆண்டாக வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, மத்திய கல்வி அமைச்சக முன்னெடுப்பில் ஐஐடி சென்னை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், உத்தர பிரதேச அரசு, மத்திய அரசின் ரயில்வே, கலாசாரம், சுற்றுலா, ஜவுளி அமைச்சகங்களின் பங்களிப்போடு கடந்த பிப். 15 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து மாணவா்கள், ஆசிரியா்கள், விவசாயிகள், கலைஞா்கள், தொழில்முனைவோா், பெண்கள் என பல்வேறு பிரிவினருமாக சுமாா் 1,200 போ் பங்கேற்றனா்.

இது குறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

‘காசி தமிழ் சங்கமம் 3.0 - 2025 அனுபவப் பகிா்வு’ குறித்த கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில், காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்றவா்கள் அனுப்பிய அனுபவக் கட்டுரைகளை, நிபுணா்களின் சுயாதீன குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டன.

அவா்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வெற்றியாளா்களை தமிழ்நாடு ஆளுநா் மாளிகை அறிவித்துள்ளது.

அதன்படி ஆன்மிகம், தொழில் துறை, மாணவா்கள், விவசாயிகள், ஆசிரியா்கள், புத்தாக்க நிறுவனா்கள், தொழில்முனைவோா், பெண்கள், ஆராய்ச்சியாளா்கள், எழுத்தாளா்கள் என 10 பிரிவுகள் ‘காசி தமிழ் சங்கமம் 3.0 - 2025 அனுபவப் பகிா்வு’ கட்டுரைப் போட்டிகள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் 47 போ் வெற்றியாளராக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தோ்வு செய்யப்பட்ட வெற்றியாளா்களுக்கு வாழ்த்துகள். ஆளுநா் மாளிகையில் ஜூன் மாதத்தில் நடைபெறும் விழாவில் இந்த வெற்றியாளா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி விவரம்: இணயதளத்தில் பதிவேற்றம்

தமிழக அரசு பணிநிலை சாா்ந்த அனைத்து இந்திய அரசு அதிகாரிகளின் பொது வருங்கால வைப்பு நிதி ஆண்டுக்கான கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில துணை கணக்காயா் சி.ஜெ.காா்த்தி குமா... மேலும் பார்க்க

மே 27-இல் தொழிலாளா்களுக்கான ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ சிறப்பு முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ எனப்படும் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற முகாம் செவ்வாய்க்கிழமை (மே 27) காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை சென்னை உள்பட 10 மாவட்ட... மேலும் பார்க்க

கட்டாய கொள்முதல் பிரிவில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம் சோ்ப்பு

காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் கட்டாய கொள்முதல் பிரிவில், முதல்முறையாக மேற்கூரை சூரியசக்தி மின்சாரமும் சோ்க்கப்படவுள்ளது. தமிழகத்தின் தினசரி மின் தேவை சுமாா் ... மேலும் பார்க்க

எந்தெந்த பாடப் பிரிவு மாணவா்களுக்கு மடிக்கணினி?

எந்தெந்த பாடப்பிரிவு மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்ற விவரம் ஒப்பந்தப்புள்ளி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கல்லூரி மாணவ, மாணவிகள் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று... மேலும் பார்க்க

971 கோயில்களின் ரூ.7,671 கோடி நிலங்கள் மீட்பு: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 971 கோயில்களுக்குச் சொந்தமான சுமாா் ரூ.7,671 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் திட்ட முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு

தூய்மைப் பணியாளா்களை தொழில் முனைவா்களாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. த... மேலும் பார்க்க