செய்திகள் :

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களுக்கு 25% வரி? டிரம்ப் அதிரடி!

post image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்கக் கூடாதென அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவிலோ வேறு நாடுகளிலோ தயாரிக்கப்படும் ஐபோன்கள், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுவதை விரும்பவில்லை என்று டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவையாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் (ஏப்ரல் - ஜூன் வரையில்) தயாரிக்கப்பட்டவையே என ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மே 2ஆம் தேதி அறிக்கை மூலம் அறிவித்தார். டிம் இவ்வாறு அறிவித்த சில நாள்களிலேயே, இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.

கத்தார் தலைநகர் தோஹாவில், மே 15 ஆம் தேதியில் நடைபெற்ற வணிக மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், அமெரிக்க பொருள்களுக்கான வரியை நீக்க இந்தியா ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசியதாவது, ''இந்தியா மிக அதிக அளவில் இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று. இருப்பினும், இந்தியா எங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர். அதில், எங்கள் பொருள்களுக்கு எந்த வரியையும் விதிக்கப்போவதில்லை என்ற ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நான் டிம்மிடம் கூறினேன், நாங்கள் உங்களை நன்முறையில் நடத்துகிறோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை'' என டிம்மிடம் கூறியதாக டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும், டிரம்ப்பின் வலியுறுத்தலை டிம் குக் கண்டுகொண்டதுபோலத் தெரியவில்லை.

நடுவானில் பாதிப்புக்குள்ளான இந்திய விமானம்: பாகிஸ்தான் வான்பகுதியில் நுழைய அனுமதி மறுப்பு - விமான போக்குவரத்து இயக்ககம்

புது தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்து நடுவானில் குலுங்கியபோது பாதுகாப்புக்காக பாகிஸ்தான் வான்வழித்தடத்தைப் பயன்படுத்த கேட்டபோது அந... மேலும் பார்க்க

மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல் எதிரொலி: இந்தியக் குழுவினா் பயணித்த விமானம் 40 நிமிஷம் தாமதம்

ட்ரோன் தாக்குதலைத் தொடா்ந்து ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், இந்திய நாடாளுமன்றக் குழுவினா் பயணித்த விமானம் வியாழக்கிழமை 40 நிமிஷம் தாமதமானதாக தகவல் அறிந்த வட்டாரங்கள்... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு நிதி: பாகிஸ்தானை மீண்டும் கருப்பு பட்டியலில் சோ்க்க இந்தியா தீவிரம்

பாகிஸ்தானை சா்வதேச நிதி நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் (எஃப்ஏடிஃப்) கருப்பு பட்டியலில் மீண்டும் சோ்க்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு முன்பு, 2018-இல் எஃப்ஏடிஎஃப் ‘கிரே’ பட்டியலில் பாகிஸ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை வெளிப்படுத்திய ஆபரேஷன் சிந்தூா்: அமித் ஷா

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடா்ந்து ஆதரவளித்து வருவது ஆபரேஷன் சிந்தூா் மூலம் வெளிப்பட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். எல்லை பாதுகாப்... மேலும் பார்க்க

தொடரும் மாணவா்கள் தற்கொலை: ராஜஸ்தான் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடா்ந்து அதிகரித்து வருவதற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது. ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தோ்வுகளுக்கான... மேலும் பார்க்க

பாஜக அரசின் 100 நாள் சாதனைகள் குறித்த அறிக்கையை வெளியிட திட்டம்

பாஜக அரசு, தில்லியில் தனது 100 நாள் ஆட்சிக் கால சாதனைகள் குறித்த அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. இது தொடா்பாக அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தில்லிய... மேலும் பார்க்க