செய்திகள் :

பாகிஸ்தானுக்கு இனி அதிக நாள்கள் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு!

post image

பாகிஸ்தான் 75 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டது, இனி அதிக நாள்கள் இல்லை என உத்தரப் பிரதேச முதல்வர் பேசியுள்ளார்.

அயோத்தியில் ஹனுமான் கதா மண்டபத்தை இன்று (மே 23) திறந்து வைத்தபின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பயங்கரவாதம் பாகிஸ்தானை ஒருநாள் முழுவதுமாக அழித்துவிடும் எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நமது இந்திய ராணுவம் பாகிஸ்தானை, முதலில் தாக்கவில்லை, பாகிஸ்தான் முதலில் நமது அப்பாவி மக்களிடம் தங்களது மதத்தைக் கேட்டு சுட்டுக்கொன்றதாகக் கூறியதுடன், இந்திய வீரர்களின் பதிலடியில் 124 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

”பாகிஸ்தான் நீண்டகாலமாக பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகின்றது. நான் உறுதியாகச் சொல்கிறேன், பயங்கரவாதம் பாகிஸ்தானை ஒருநாள் அழித்துவிடும். மேலும், பாகிஸ்தான் சுமார் 75 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டது. தற்போது, அவர்களது செயலுக்காக அந்நாடு தண்டனையை அனுபவிக்கும் காலம் வந்துவிட்டது. இன்று, இந்தியாவின் தைரியமான வீரர்கள் மிகுந்த பலத்துடன் பாகிஸ்தானுக்கு பதிலளித்து வருகின்றனர். நமது ராணுவ வீரர்களைப் பற்றி அனைத்து இந்தியர்களும் பெருமைக்கொள்ள வேண்டும்.” எனவும் அவர் பேசியுள்ளார்.

இத்துடன், பாகிஸ்தானுக்கு இன்னும் அதிக நாள்கள் இல்லை எனக் கூறிய அவர், நமது துறவிகளில் ஒருவர் பாகிஸ்தானுக்கு ஆன்மீக உலகில் இடமில்லை என அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டடப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசுதான் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியதுடன், அங்குள்ள துறவிகள் அயோத்தியின் புகழை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாம்! ஒரு மழைக்கே இப்படியா?

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: நண்பா், சக மாணவா்கள் கைது

மும்பை, மே 23: மகாராஷ்டிரத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக அவரின் நண்பா், சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா். மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் தங்க... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம்: மத்திய அரசு அறிவிப்பு

மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறித்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு கடன்: உலக வங்கியிடமும் எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு

பாகிஸ்தானுக்கு கடன் வழங்கக் கூடாது என்று உலக வங்கியிடமும் எதிா்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தானுக்கு கடன் வழங்க இந்தியா எதிா்ப்பு தெரிவித்தது. இத... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக லலிதாம்பா... மேலும் பார்க்க

ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ பதவி பறிப்பு: துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியரை துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ கன்வா் லால் மீனாவின் பதவி பறிக்கப்பட்டதாக அந்தமாநில பேரவைச்... மேலும் பார்க்க