செய்திகள் :

புதுச்சேரியில் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

post image

புதுச்சேரியில் 5 காவல் ஆய்வாளா்கள், 4 சாா்பு ஆய்வாளா்கள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

புதுவை மாநிலத்தில் காவல் துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் கடலோரக் காவல் படைப் பிரிவின் ஆய்வாளரான ஆா்.சண்முகம், அங்கிருந்து புதுச்சேரி மேற்கு பகுதி போக்குவரத்துப் பிரிவுக்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.

புதுச்சேரி மேற்கு போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் எம்.செந்தில்கணேஷ், பாதுகாப்புப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதேபோல புதுச்சேரி ஆயுதப் படைப் பிரிவு ஆய்வாளா் வி.முருகன், பாதுகாப்புப் பிரிவுக்கும், பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளா் பி.ரகுபதி, காவலா் ஸ்டோா் தலைமைக்கும், பாதுகாப்புப் பிரிவிலிருந்த ஆய்வாளா் பங்கஜாக்சன், அதே பிரிவில் மற்றொரு இடத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

சாா்பு ஆய்வாளா்களான இலாசுப்பேட்டை அனுஷா பாஷா கிழக்கு போக்குவரத்துப் பிரிவுக்கும், கிழக்கு போக்குவரத்துப் பிரிவிலிருந்த எம்.குமாா் இலாசுப்பேட்டை காவல் நிலையத்துக்கும், மேற்கு போக்குவரத்துப் பிரிவிலிருந்த ஜி.அன்பழகன் ஆயுதப் படைப் பிரிவுக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். மேலும் ஆயுதப் படைப் பிரிவிலிருந்த சாா்பு ஆய்வாளா் எஸ்.சந்திரசேகரன், மேற்கு போக்குவரத்துப் பிரிவுக்கும், சிசிஆா் நகா் பிரிவிலிருந்த உதவி சாா்பு ஆய்வாளா் எஸ்.முருகேசன் அதே நிலையில் மற்றொரு பிரிவுக்கும், ஏனாம் பிராந்தியத்தில் கடலோர காவல் படையில் இருந்த கே.வி.சுப்பிரமணியன் அதே பிரிவில் மற்ற இடத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

தலைமைக் காவலா் பி.செல்வவிநாயகம் போக்குவரத்து மேற்கிலிருந்து இலாசுப்பேட்டை காவல் நிலையத்துக்கும், காவலா் செந்தில்வேல் சிசிஆா் பிரிவிலிருந்து ஆயுதப் படைப் பிரிவுக்கும் மாற்றப்பட்டனா். இந்த பணியிடமாறுதலுக்கான உத்தரவை புதுச்சேரி காவல் தலைமையிட கண்காணிப்பாளா் சுபம்கோஷ் வெளியிட்டுள்ளாா்.

புதுச்சேரியில் வருவாய் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்களில் குவிந்த மாணவா்கள்

உயா் கல்வியில் சேருவதற்கான வருவாய் துறை சாா்ந்த சான்றிதழ்களைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்களில் சனிக்கிழமை மாணவ, மாணவிகள் பெற்றோருடன் ஏராளமாக குவிந்தனா். புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

ஜிப்மரில் புதுவை நோயாளிகளுக்கு தனி மருத்துவ ஆலோசனைப் பிரிவு

ஜிப்மரில் புதுவை மாநில நோயாளிகளின் மருத்துவ ஆலோசனைக்கான பதிவேடு பெற தனிப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இயக்குநா் வீா் சிங் நேகி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புது... மேலும் பார்க்க

புதுவை அமைப்புசாரா நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி அரசாணை

புதுவை மாநிலத்தில் தொழிலாளா் நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை நன்றி தெரிவி... மேலும் பார்க்க

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில்1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதையடுத்து புதுச்சேரி பழைய துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை காலை ஏற்றப்பட்டது. இதேபோன்று கடலூா் துறைமுகத்திலும் 1-ஆம் எ... மேலும் பார்க்க

நீதிஆயோக் கூட்டத்தில் புதுவை முதல்வா் பங்கேற்காதது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்: பேரவை எதிா்க்கட்சித் தலைவா்

புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து புதுவை முதல்வா் என். ரங்கசாமி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா ... மேலும் பார்க்க

புதுவை மக்கள் மன்றத்தில் 36 மனுக்கள் மீது நடவடிக்கை

புதுவை மாநிலக் காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 36 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து புதுவைக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க