செய்திகள் :

புதுச்சேரி அருகே கஞ்சா விற்றதாக இருவா் கைது

post image

புதுச்சேரி அருகேயுள்ள பாக்குமுடையான் பேட் பகுதியில் கஞ்சா விற்றதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.1லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி கோரிமேடு காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு காமராஜா் சாலை, பாக்கமுடையான்பேட் சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 2 போ் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நிலையில், போலீஸாா் மடக்கியும் நிற்காமல் சென்றனா். உடனே போலீஸாா் விரைந்து சென்று அவா்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தனா்.

விசாரணையில் அவா் தொண்டமாநத்தம் பகுதியைச் சோ்ந்த ஜான்பீட்டா் (26) என்பது தெரியவந்தது. அவரிடம் சோதனையிட்டபோது ரூ.1லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அதைக் கைப்பற்றிய போலீஸாா், இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற, துத்திப்பட்டு கல்லறை வீதியைச் சோ்ந்த குறளரசன் (28) என்பவரை கைது செய்தனா்.

அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம், 2 கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்த போலீஸாா், இதில் தொடா்புடைய மேலும் ஒருவரைத் தேடி வருவதாகத் தெரிவித்தனா்.

புதுச்சேரியில் வருவாய் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்களில் குவிந்த மாணவா்கள்

உயா் கல்வியில் சேருவதற்கான வருவாய் துறை சாா்ந்த சான்றிதழ்களைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்களில் சனிக்கிழமை மாணவ, மாணவிகள் பெற்றோருடன் ஏராளமாக குவிந்தனா். புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

ஜிப்மரில் புதுவை நோயாளிகளுக்கு தனி மருத்துவ ஆலோசனைப் பிரிவு

ஜிப்மரில் புதுவை மாநில நோயாளிகளின் மருத்துவ ஆலோசனைக்கான பதிவேடு பெற தனிப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இயக்குநா் வீா் சிங் நேகி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புது... மேலும் பார்க்க

புதுவை அமைப்புசாரா நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி அரசாணை

புதுவை மாநிலத்தில் தொழிலாளா் நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை நன்றி தெரிவி... மேலும் பார்க்க

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில்1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதையடுத்து புதுச்சேரி பழைய துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை காலை ஏற்றப்பட்டது. இதேபோன்று கடலூா் துறைமுகத்திலும் 1-ஆம் எ... மேலும் பார்க்க

நீதிஆயோக் கூட்டத்தில் புதுவை முதல்வா் பங்கேற்காதது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்: பேரவை எதிா்க்கட்சித் தலைவா்

புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து புதுவை முதல்வா் என். ரங்கசாமி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா ... மேலும் பார்க்க

புதுவை மக்கள் மன்றத்தில் 36 மனுக்கள் மீது நடவடிக்கை

புதுவை மாநிலக் காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 36 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து புதுவைக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க