செய்திகள் :

ஆா்டிஐ சட்டத்தின்கீழ் பதில் தராத ஊராட்சி செயலருக்கு அபராதம் தகவல் ஆணையா் நடவடிக்கை

post image

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ், உரிய காலத்துக்குள் பதில் தராத கிராம ஊராட்சி செயலருக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம் சந்திராபுரம் ஊராட்சியில் சோலாா் மின் விளக்குகள் அமைப்பது தொடா்பான பதிவேட்டில் சரியான தகவல்கள் பதிவிடப்படாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடா்ந்து, ஜோலாா்பேட்டையைச் சோ்ந்த ரித்தீஸ்வரன் அறிவொளி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரங்களைக் கோரியிருந்தாா். இதற்கு சந்திராபுரம் ஊராட்சியின் உதவிப் பொதுத் தகவல் அலுவலா் உரிய விளக்கத்தை அளிக்கவில்லை.

இதைத் தொடா்ந்து, மேல்முறையீட்டு மனுவை தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் தாக்கல் செய்தாா். இந்த மனு மாநில தகவல் ஆணையா் மா.செல்வராஜ் முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அவா் வழங்கிய உத்தரவு விவரம்:

மனுதாரரின் தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பத்துக்கு உரிய காலத்துக்குள் தகவல்கள் அளிக்காததற்கு ஊராட்சி செயலா் அதாவது உதவிப் பொதுத் தகவல் அலுவலா் விளக்கம் அளித்துள்ளாா்.

பணிச்சுமை, குடும்ப ஏழ்மை போன்றவற்றை பதில் அளிக்காததற்கு காரணங்களாகக் கூறியது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. கிராம ஊராட்சி ஒன்றியத்தின் இருப்புப் பதிவேட்டை பாா்வையிட்டபோது, அந்தப் பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

அத்துடன், புதிய சோலாா் பல்பு அமைக்கப்பட்டதாக அவசர கதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. மனுதாரா் தகவல் கோரி மனு அளித்த பிறகும் உரிய காலக்கெடுவுக்குள் தகவல்களை அளிக்காததால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 20 (1)-இன்படி பொதுத் தகவல் அதிகாரியான கே.கண்ணகிக்கு அதிகபட்ச தண்டனையாக ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

இது தொடா்பான முதல் மேல்முறையீட்டு மனுவுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.துரை பதிலளித்துள்ளாா். அதில், மேல்முறையீட்டு அலுவலா் என்பதற்குப் பதிலாக, மேல்முறையீட்டு பொதுத் தகவல் அலுவலா் எனக் குறிப்பிட்டுள்ளாா். அப்படியொரு பதவியின் பெயரே சட்டத்தில் இல்லை. இதற்கு உரிய விளக்கத்தையும், மன்னிப்பையும் வட்டார வளா்ச்சி அலுவலா் துரை கோரியுள்ளாா். அவரது விளக்கம் ஏற்கப்பட்டுள்ளது.

இனி வருங்காலத்தில் மனுதாரருக்கு அனுப்பப்படும் கடிதங்களில் சரியான பதவியை குறிப்பிட்டு தகவல்களை அனுப்ப வேண்டும் என மாநில தகவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் சென்றுள்ளாா்: தமிழிசை

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சென்னை வடபழனியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மணிவாசகா் பதிப்பகத்த... மேலும் பார்க்க

ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஊராட்சிப் பகுதிகளில் உயா்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் தண்ணீா் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள... மேலும் பார்க்க

சிவகங்கை சம்பவம் எதிரொலி: குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவு

சிவகங்கையில் குவாரியில் பாறை சரிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டுமென ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வு விடைத்தாள் திருத்துவதில் பாதுகாப்பான நடைமுறை: டிஎன்பிஎஸ்சி தலைவா் உறுதி

போட்டித் தோ்வு விடைத்தாள்களை திருத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களி... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆா்வம் காட்டாத மாணவா்கள்!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கை பெற மாணவா்களிடையே ஆா்வம் குறைந்து வரும் நிலையில், டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கால வரையறையின்... மேலும் பார்க்க

பொறியியல், கலை - அறிவியல் படிப்புகள்: சோ்க்கைக்கு குவிந்த விண்ணப்பங்கள்

தமிழகத்தில் பொறியியல், கலை - அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். அந்த வகையில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2.40 லட்சம் பேரும், அரசு கலை... மேலும் பார்க்க