செய்திகள் :

ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ பதவி பறிப்பு: துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை

post image

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியரை துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ கன்வா் லால் மீனாவின் பதவி பறிக்கப்பட்டதாக அந்தமாநில பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.

கடந்த 2005-ஆம் ஆண்டு கிராம பஞ்சாயத்து தலைவா் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்தக் கோரி வருவாய் கோட்டாட்சியரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக கன்வா் லால் மீனா மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அரசு சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியததாகவும் 20 ஆண்டுகளுக்கு பிறகு கன்வா் மீனாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் கடந்த 2020-இல் உத்தரவிட்டது.

இந்நிலையில், விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி கன்வா் லால் மீனா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 2 வாரங்களில் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான மீனா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், மீனாயை கடந்த மே 1-ஆம் தேதியிலிருந்து எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்குவதாக ராஜஸ்தான் பேரவைச் செயலகம் வெள்ளிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

இதுதொடா்பாக சட்ட வல்லுநா்களிடம் பேரவைத் தலைவா் கேட்ட ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்வா் லால் மீனாவின் ஆன்டா தொகுதி காலியானதாக தோ்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்றும், அக்டோபா் மாதத்துக்குள் அந்தத் தொகுதிக்கு இடைத் தோ்தல் நடத்தப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

எதிா்க்கட்சித் தலைவரும், மாநில காங்கிரஸ் தலைவருமான திகாராம் கூறுகையில், ‘விசாரணை நீதிமன்ற உத்தரவின்படி மீனா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநா் மற்றும் பேரவைத் தலைவரிடம் பல முறை கடிதம் வழங்கியும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுத்த பிறகுதான் அவரது எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் கிடைத்த வெற்றி’ என்றாா்.

இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!

இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு மு... மேலும் பார்க்க

‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூா் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்ச... மேலும் பார்க்க

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதப் படைப் பிரிவினரின் பணிநிலை ஆய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத்திய எல்லைப் படையினா் (ஐடிபிபி), ... மேலும் பார்க்க

மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் குற்றச்சாட்டு

அச்ச உணா்வை ஏற்படுத்தி மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். ஜொ்மனி சென்ற அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டுத் தலைநகா் பொ்லினில் ஜெ... மேலும் பார்க்க

குடிமைப் பணித் தோ்வுக்கு கட்டாயமாகிறது ஆதாா் எண்!

குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண்ணை குறிப்பிடும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய பணியாளா் தோ்வாணையத் தலைவா் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தெரிவித்தாா். மாநில அ... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்? நாடாளுன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்தியாவின் நல்லெண்ண முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது. பருவநி... மேலும் பார்க்க