செய்திகள் :

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை!

post image

அமெரிக்க அரசுடன் ஏற்பட்டிருக்கும் மோதலைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களை சேர்க்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான அங்கீகாரத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.

இதனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்துக்கு மாற வேண்டிய அல்லது அமெரிக்காவைவிட்டு வெளியேறும் சூழல் எழுந்துள்ளது.

அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 6,000-க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

சமீபத்தில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் போராட்டங்களுக்கு அனுமதிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்தார்.

டிரம்பின் நிபந்தனைகளை ஹார்வர்டு நிர்வாகம் ஏற்க மறுத்த நிலையில், அந்த பல்கலைக்கழகத்துக்கான ரூ. 19,000 கோடி (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை நிறுத்தி அந்நாட்டு அரசு நெருக்கடி அளித்தது.

இந்த நிலையில், அமெரிக்க எதிர்ப்பு, பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வளாகத்தில் யூத மாணவர்களைத் தாக்க அனுமதிப்பதன் மூலம் ஹார்வர்டு பல்கலைக்கழகம் பாதுகாப்பற்ற வளாகமாக உருவாகியிருப்பதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது, தற்போது பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வேறு கல்லூரிக்கு மாற வேண்டும், இல்லையெனில் சட்டப்பூர்வ விசா அனுமதி இழக்க நேரிடும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இது பல்கலைக்கழகத்தும் நாட்டுக்கும் கடுமையான தீங்கு விளைவிக்கும் செயல் என்றும் ஹார்வர்டு நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : ரோமில் அமெரிக்கா - ஈரான் இன்று அணுசக்திப் பேச்சு

காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்காது! இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தால் சர்ச்சை

காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான் என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் கூறியது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.காஸா மீதான தாக்குதலை எதிர்த்து, இஸ்ரேலில் ... மேலும் பார்க்க

சீனா அசத்துகிறதா? அச்சுறுத்துகிறதா? உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை!

சீனாவில் ரோபோக்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது.சீனாவில் ஹாங்சோ மாகாணத்தைச் சேர்ந்த ரோபோக்கள் தயாரிப்பு நிறுவனமான யூனிட்ரீ ரோபோட்டிக்ஸ், உலகில் முதன்முறையாக ரோபோ... மேலும் பார்க்க

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!

வங்கதேச ராணுவத் தளபதியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்தாண்டு நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தால் பிரதமா... மேலும் பார்க்க

ரஷியாவில் ட்ரோன் தாக்குதல்: கனிமொழி விமானம் தாமதம்!

ரஷியாவின் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் சென்ற விமானம் தாமதமாக தரையிறங்கியுள்ளது.ரஷியா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வ... மேலும் பார்க்க

அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபா் ‘சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்’ என... மேலும் பார்க்க

ஈஸ்டா் தின தாக்குதல்: இலங்கையில் 661 பேருக்கு இழப்பீடு

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அரசுத் தரப்பு கூறியதாவது: ... மேலும் பார்க்க