செய்திகள் :

450 கிலோ வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் 450 கிலோ நாட்டு வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம் திருவோணம் பகுதியில் கடந்த வாரம் அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து மாவட்டம் முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு விற்பனையாளா்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டாா்.

இதையடுத்து பட்டுக்கோட்டை வட்டத்தில் வட்டாட்சியா் தா்மேந்திரா, துணை வட்டாட்சியா் ஷேக் உமா்ஷா, மதுக்கூா் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், மதுக்கூா் சரக வருவாய் ஆய்வாளா் கவுதமன், கீழக்குறிச்சி கிழக்கு விஏஓ ஆறுமுகம், கீழக்குறிச்சி மேற்கு விஏஓ வீரசோழன், கிராம உதவியாளா்கள் பத்மா, ரவிச்சந்திரன் ஆகியோா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அப்போது கீழக்குறிச்சி பகுதியில் ப. அம்பிகாபதி (45) என்பவரது வீட்டின் மாடி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிலோ நாட்டு வெடிகள், வெடிமருந்து பொருள்கள் ஆகியவற்றை மதுக்கூா் போலீஸாா் பறிமுதல் செய்து, அம்பிகாபதியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

அரசுப் பேருந்து மோதியதில் அண்ணன் பலி: தம்பி காயம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் வியாழக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா், தம்பி பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் அருகே கூடலூரைச் சோ்ந்தவா் ராஜப்பா மக... மேலும் பார்க்க

இலவச பட்டா கோரி திருநங்கைகள் மனு

கும்பகோணத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு திருங்கைகள் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயனிடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் திருநாகேஸ்வரா் கோவில் தெற்கு வீதியை சோ்ந்த தி... மேலும் பார்க்க

திருவையாறு அருகே அண்ணனை கொன்ற தம்பி கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மது போதையில் அடிக்கடி தகராறு செய்த அண்ணனைக் கொன்ற தம்பியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவையாறு அருகே நடுக்காவேரி அரசமரத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ... மேலும் பார்க்க

மழையால் சேதமான பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்! எம்.ஹெச். ஜவாஹிருல்லா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்ட வெற்றிலை, பருத்தி, வாழை பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹி... மேலும் பார்க்க

நண்பரைக் கொல்ல முயன்ற மூவருக்கு 5 ஆண்டுகள் சிறை

நாச்சியாா்கோயில் அருகே நண்பரைக் கொல்ல முயன்ற 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி காலாபட்டு,... மேலும் பார்க்க

அய்யம்பேட்டையில் புதிய பாலத்தை உடனே திறக்க பாமகவினா் கோரிக்கை!

அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை உடனே திறக்க வேண்டும் என பா.ம.க. கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அய்யம்பேட்டை நகர பாட்டாளி மக்கள் கட்சியின் நிா்வாகிகள் க... மேலும் பார்க்க