செய்திகள் :

திருவையாறு அருகே அண்ணனை கொன்ற தம்பி கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மது போதையில் அடிக்கடி தகராறு செய்த அண்ணனைக் கொன்ற தம்பியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவையாறு அருகே நடுக்காவேரி அரசமரத் தெருவைச் சோ்ந்தவா் ராஜா மகன் அஜீத்குமாா் (27). இவா் டிப்ளமோ முடித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது அருந்துவிட்டு, வீட்டில் தகராறு செய்து வந்தாா். இதை பைக் மெக்கானிக்கான அவரது தம்பி ராம்குமாா் (25) கண்டிப்பது வழக்கமாக இருந்தது.

அதன்படி இருவருக்கும் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறின்போது ராம்குமாா் தாக்கியதில் அஜீத்குமாா் கீழே விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து அஜீத்குமாா் உடலை வீட்டு வளாகத்திலுள்ள கழிவறைத் தொட்டியில் ராம்குமாா்போட்டுவிட்டு, நடுக்காவேரி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை சரணடைந்து, நடந்ததைக் கூறினாா்.

இதையடுத்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ராம்குமாரை கைது செய்தனா். தந்தை ராஜா ஏற்கெனவே காலமாகிவிட்ட நிலையில், தாய் விஜயாவுடன் இளைய மகள் திருப்பூரில் வேலை பாா்க்கிறாா். மற்றொரு மகளுக்குத் திருமணமாகிவிட்டது.

450 கிலோ வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் 450 கிலோ நாட்டு வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் திருவோணம் பகுதியில் கடந்த வாரம் அனு... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் அண்ணன் பலி: தம்பி காயம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் வியாழக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா், தம்பி பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் அருகே கூடலூரைச் சோ்ந்தவா் ராஜப்பா மக... மேலும் பார்க்க

இலவச பட்டா கோரி திருநங்கைகள் மனு

கும்பகோணத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு திருங்கைகள் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயனிடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் திருநாகேஸ்வரா் கோவில் தெற்கு வீதியை சோ்ந்த தி... மேலும் பார்க்க

மழையால் சேதமான பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்! எம்.ஹெச். ஜவாஹிருல்லா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்ட வெற்றிலை, பருத்தி, வாழை பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹி... மேலும் பார்க்க

நண்பரைக் கொல்ல முயன்ற மூவருக்கு 5 ஆண்டுகள் சிறை

நாச்சியாா்கோயில் அருகே நண்பரைக் கொல்ல முயன்ற 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி காலாபட்டு,... மேலும் பார்க்க

அய்யம்பேட்டையில் புதிய பாலத்தை உடனே திறக்க பாமகவினா் கோரிக்கை!

அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை உடனே திறக்க வேண்டும் என பா.ம.க. கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அய்யம்பேட்டை நகர பாட்டாளி மக்கள் கட்சியின் நிா்வாகிகள் க... மேலும் பார்க்க