செய்திகள் :

தாணே: 3 நாள்களில் 10 கரோனா பாதிப்புகள் உறுதி!

post image

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 10 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தெற்காசிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களிலும் கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் தாணே நகரில் கடந்த 3 நாள்களில் 10 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதால், அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, தாணே நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரிடமும் லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும், அவர்கள் அனைவரும் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாணே நகராட்சி ஆணையர் சௌரப் ராவ், பொதுநலத் துறை மற்றும் மருத்துவமனைகள் அனைத்தும் எச்சரிக்கையுடன் தயார்நிலையில் இருக்கவும், கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, அம்மாநில தலைமைச் சுகாதார ஆணையர் மருத்துவர் சேத்னா நிதில், உயர்நிலை அதிகாரிகளுடன் நேற்று (மே 23) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

அதன்பின்னர், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

’தேவையான அளவுக்கு மருந்துக்கள் அனைத்து மருத்துவ நிலையங்களிலும் சேமிக்கப்பட்டுள்ளன மற்றும் கரோனா பரிசோதனைக் கருவிகளும் தயார்நிலையிலுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா சிகிச்சைக்காக அங்குள்ள முக்கிய மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார்நிலையிலுள்ளதாகவும், இந்தத் தொற்றுப் பரவல் தற்போது கட்டுப்பாட்டிலுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:பினராயி விஜயனுக்குப் பிறந்தநாள்: பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து!

கேரளத்தில் 273 பேருக்கு கரோனா; முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

கேரளத்தில் இதுவரை 273 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ப... மேலும் பார்க்க

ரூ.11.50 லட்சத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?

கியா நிறுவனம் கேரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.என்ஜின் மற்றும் பவர்டிரெய்ன்கியா கேரன்ஸ் கிளாவிஸ் மூன்று விதமான என்ஜின் விருப்ப... மேலும் பார்க்க

அணுசக்தி பாதுகாப்பான ஆட்சியின் மீது முழு நம்பிக்கையுள்ளது: பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ராணுவ கட்டளைகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட சூழலில் இருநாடுகளும் அணு ஆயுதங்களைக் ... மேலும் பார்க்க

மே 26ல் குஜராஜ் செல்கிறார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக மே 26, 27ல் குஜராத் மாநிலத்துக்குச் செல்லவுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ஹர்... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத 4 முதல்வர்கள்! காரணம்?

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் தில்லியில் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் பங்க... மேலும் பார்க்க

கோட்டா மாணவர்கள் தற்கொலை விவகாரம்: ராஜஸ்தான் துணை முதல்வர் என்ன சொல்கிறார்?

ராஜஸ்தான் கோட்டா நகரில் மாணவர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்வது பற்றி துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவா கருத்து தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "ராஜஸ்தானில் மாணவர்கள் அதிகமா... மேலும் பார்க்க