செய்திகள் :

அணுசக்தி பாதுகாப்பான ஆட்சியின் மீது முழு நம்பிக்கையுள்ளது: பாகிஸ்தான்!

post image

பாகிஸ்தானின் ராணுவ கட்டளைகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட சூழலில் இருநாடுகளும் அணு ஆயுதங்களைக் குறித்த தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், கடந்த மே 22 ஆம் தேதியன்று பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அனைத்தும், சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனவும்; அவை அனைத்தும் அத்தகைய முரட்டுத் தனமான நாட்டில் பாதுகாப்பாக இல்லை, எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தங்களது கட்டுப்பாட்டிலுள்ள அணு ஆயுதங்கள் குறித்து பாகிஸ்தான் அரசு, விரிவான அணுசக்தி பாதுகாப்பு ஆட்சியில் தங்களது நாடு நம்பிக்கையுடன் இருப்பதாக, நேற்று (மே 23) கூறியுள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

”பாகிஸ்தான் அதன் விரிவான அணுசக்தி பாதுகாப்பான ஆட்சியின் வலிமையிலும் அதன் கட்டளைகள் மற்றும் கட்டமைப்புகளின் வலிமையில் முழு நம்பிக்கையுடன் உள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச சமூகம் இந்தியாவின் அணுசக்தி குறித்தே அதிகம் கவலைப்பட வேண்டுமெனவும், இந்தியாவின் அரசியல், ஊடகம் மற்றும் சமூகப் பிரிவினைகள் ஆகியவற்றில் அதிகரித்து வரும் தீவிரமையமாக்கலினால், அவர்களது அணுசக்தி தொடர்பான நியாயமான கவலைகளை அதிகரித்துள்ளதாகவும், குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தலையும், அவர்களது எல்லையைக் கடந்த பயங்கரவாதத்தையும், இந்தியா ஒருபோது சகித்துக்கொள்ளாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:மே 26ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைதுகள் 76 ஆக உயர்வு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கைது செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

பிகாரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ள அஹியாபூர் கிராமத்தில் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலைய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் ராகுல் நேரடி ஒத்துழைப்பு! பாஜக கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பூஞ்ச் பகுதியைப் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு சோகமான நிகழ்வு என்று குறிப்பிட... மேலும் பார்க்க

மக்கள் பீதியடைய வேண்டாம்: கர்நாடக சுகாதார அமைச்சர்

கர்நாடகத்தில் கரோனா தொற்று படிபடியாக அதிகரித்துவரும் நிலையில், மக்கள் பீதியடைய அவசியமில்ல என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், ... மேலும் பார்க்க