செய்திகள் :

மக்கள் பீதியடைய வேண்டாம்: கர்நாடக சுகாதார அமைச்சர்

post image

கர்நாடகத்தில் கரோனா தொற்று படிபடியாக அதிகரித்துவரும் நிலையில், மக்கள் பீதியடைய அவசியமில்ல என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

கரோனா வைரஸ் தொற்று மக்களை மீண்டும் தாக்கத் தொடங்கியுள்ளதாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொற்றுநோயாக மாறிய கரோனா நோயின் தீவிரத்தை மிகைப்படுத்தாமல், நிலைமையைக் குறித்து துல்லிய தகவலை வழங்குமாறு ஊடகங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பெங்களூரில் மட்டும் 32 பேர் உள்பட மாநிலத்தில் 35 பேர் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. மாநில அரசு விழிப்புடன் இருப்பதாகவும், வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா அதிகரிப்பு குறித்து அவர் கூறுகையில், அதிகளவிலான சோதனைகள் நடத்தப்பட்டதினால், பாதிப்பு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் எதுவுமில்லை, மக்கள் சுதந்திரமாகச் சுற்றி வரலாம். நாட்டின் எந்தப் பகுதிகளுக்கும் மக்கள் சென்று வரலாம்.

சமீபத்திய திடீர் தொற்று, கரோனா வைரஸின் ஒரு துணை வகையான ஜெஎன்-1 மாறுபாடாகும். இது சிங்கப்பூர், ஹாங்காங், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கண்டறியப்பட்டன என்று அவர் கூறினார்.

பஞ்சாபில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கு 5 நாள் காவல்

பஞ்சாபில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ராமன் அரோராவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஜலந்தர் மத்திய சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ராமன் ... மேலும் பார்க்க

ரூ.25 லட்சம் பண மோசடி: சக வீராங்கனை மீது தீப்தி சர்மா புகார்!

யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகாரளித்துள்ளார்.சமீபத்தில் முடிவடைந்த மகளிர் ப... மேலும் பார்க்க

அசாமில் 9 வங்கதேசத்தினர் கைது

அசாமில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 9 வங்கதேசத்தவர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மோரிகான், மிகிர்பேட்டா மற்றும் தரம்துல் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஜாகி... மேலும் பார்க்க

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது.கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க