செய்திகள் :

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; பள்ளி மாணவியுடன் லாட்ஜில் தங்கிய இளைஞர் கைதான பின்னணி!

post image

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் தாத்தா, பாட்டியுடன் வசிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி, திடீரென மாயமனார். அவரைக் கண்டுபிடித்து தரும்படி மாணவி தரப்பில் ஆவடி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதனால் போலீஸார் மாணவியின் ன் நட்பு வட்டாரத்தில் விசாரணை நடத்தி அவரைத் தேடிவந்தனர். இந்தச் சமயத்தில்தான் மாணவியின் தாத்தாவுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், தாம்பரத்தில் உள்ள லாட்ஜ்ஜில் அறை எடுத்ததற்கு நன்றி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் மாணவியின் தாத்தா, இந்தத் தகவலை ஆவடி போலீஸாரிடம் தெரிவித்தார். உடனடியாக சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு சென்று போலீஸார் விசாரித்தனர். அங்கு மாயமான மாணவியும் இளைஞர் ஒருவரும் அறையில் இருந்தனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் அழைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்கு வந்தனர்.

போக்சோ
போக்சோ

மாணவியிடம் மகளிர் போலீஸார் தனியாக விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து ஆவடி போலீஸார் கூறுகையில், ``மாணவிக்கு இன்ஸ்டா மூலம் பொள்ளாச்சியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரும் வீடியோ காலில் மணிக்கணக்கில் பேசி வந்திருக்கிறார்கள். இதையடுத்து மாணவியைச் சந்திக்க சூர்யா பொள்ளாச்சியிலிருந்து ஆவடிக்கு வந்திருக்கிறார். பின்னர் மாணவியை அழைத்துக் கொண்டு தாம்பரத்தில் உள்ள லாட்ஜுக்கு சென்றிருக்கிறார். அப்போது லாட்ஜின் ஊழியர்கள், அறையை முன்பதிவு செய்ய சூர்யாவிடம் செல்போன் நம்பரை கேட்டிருக்கிறார்கள். அதற்கு சூர்யா, தன்னுடைய செல்போன் நம்பரைக் கொடுக்காமல் அமைதியாக இருந்திருக்கிறார். இதையடுத்து மாணவி, தன்னுடைய தாத்தாவின் செல்போன் நம்பரைக் கொடுத்து அறையை முன்பதிவு செய்திருக்கிறார். அந்த மெசேஜ் மூலம்தான் மாணவியை மீட்டோம். மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. அதனால் அவரைக் கடத்திச் சென்ற குற்றத்துக்காக சூர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்திருக்கிறோம்" என்றனர்.

இந்த வழக்கை விசாரித்த போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மாணவியின் அப்பா அவரைப் பிரிந்து சென்றுவிட்டார். அம்மா ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதனால்தான் மாணவி, தன்னுடைய தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்து வந்திருக்கிறார். மாணவியை சரிவர கண்காணிக்காததால் அவர் எந்நேரமும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கியிருந்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் பொள்ளாச்சியைச் சேர்ந்த சூர்யாவுடன் பழகி இந்த விபரீத செயலில் ஈடுபட்டிருக்கிறார். ஏற்கெனவே மாணவி, இதற்கு முன்பு இதே போல ஒரு செயலில் ஈடுபட்டிருக்கிறார்" என்றார்.

`பேன்ட் அளவு சரியில்லை' - டெய்லரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற இளைஞர்... குமரி `பகீர்'

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, திட்டுவிளை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(65). இவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் பெண்களுக்கான தையலகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம... மேலும் பார்க்க

போதையில் தகராறு; அண்ணனை கொன்ற தம்பி போலீஸில் சரண் - மதுவால் நடந்த விபரீதம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி அரசமர தெருவைச் சேர்ந்த ராஜா இவரது மகன்கள் அஜித்குமார் (27) டிப்ளமோ படித்துள்ளார். ராம்குமார் (25) டூ விலர் மெக்கானிக். ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்!

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் ச... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? அதிர்ச்சி தகவல்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ‘யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் அதன் உரிமையாள... மேலும் பார்க்க

'உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்' - எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று... மேலும் பார்க்க

சென்னை: ஏஐ மூலம் ஆபாச வீடியோ - மணிப்பூர் இளம் பெண்ணை பழிவாங்க ஆசைப்பட்ட டிரைவர் சிக்கியது எப்படி?

மணிப்பூரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2024-ல் சென்னை சூளைமேடு பகுதியில் தங்கியிருந்து சலூன் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் பைக் கால்டாக்ஸி மூலம் அடிக்கடி பயணித்திருக... மேலும் பார்க்க