செய்திகள் :

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்!

post image

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் சேர்ந்த ஜோலி அகஸ்டின், தன்னை மருத்துவர் எனக் கூறிக் கொண்டு நோயாளிகளுக்கு ஊசி செலுத்தியும், குளுக்கோஸ் செலுத்தியும் சிகிச்சை அளித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஜோலி அகஸ்டின் மருந்துக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஜோலி அகஸ்டின் மருந்துக் கடையின் பின்புறம் உள்ள இடத்தில் இரண்டு கட்டில் வசதிகளுடன் நோயாளிகளுக்கு ஊசி மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் செலுத்துவதும் தெரியவந்தது.

ஜோலி அகஸ்டீன்

அவரிடம் விசாரித்தபோது, நோயாளிகளுக்கு வைத்தியம் அளிப்பதற்கான எந்தவித கல்வித் தகுதியும் இல்லாததும் தெரியவந்தது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ``கேரளத்தில் பிளஸ் 2 வரைக்கும் படித்துள்ள ஜோலி அகஸ்டின் திருப்பூரில் கடந்த 18 ஆண்டுகளாக தன்னை மருத்துவர் எனக் கூறிக் கொண்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இவர் கடந்த 2017, 2024- ஆம் ஆண்டும் இதே காரணத்திற்காக இருமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். மருந்துக் கடையில் வைத்தியம் பார்க்க வைத்திருந்த மருந்துப் பொருள்கள் மற்றும் ஊசி மருந்துகள், சர்க்கரை அளவு பார்க்கும் கருவி, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவிகள் கைப்பற்றப்பட்டு உடனடியாக சீல் வைக்கப்பட்டதுடன், ஜோலி அகஸ்டின் கைது செய்யப்பட்டார்" என்றனர்.

பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? அதிர்ச்சி தகவல்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ‘யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் அதன் உரிமையாள... மேலும் பார்க்க

'உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்' - எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று... மேலும் பார்க்க

சென்னை: ஏஐ மூலம் ஆபாச வீடியோ - மணிப்பூர் இளம் பெண்ணை பழிவாங்க ஆசைப்பட்ட டிரைவர் சிக்கியது எப்படி?

மணிப்பூரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2024-ல் சென்னை சூளைமேடு பகுதியில் தங்கியிருந்து சலூன் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் பைக் கால்டாக்ஸி மூலம் அடிக்கடி பயணித்திருக... மேலும் பார்க்க

கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை - பள்ளி மாணவர்கள் உதவியோடு உடலை காட்டில் எரித்த பெண் பிரின்சிபால்

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் அருகில் உள்ள செளசாலா வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கடந்த 15ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் எரிந்து கிடந்... மேலும் பார்க்க

அரியலூர்: பச்சிளங்குழந்தை கழிவறைக்குள் அமுக்கி கொலை; இளம் பெண் கைது; பகீர் பின்னணி என்ன?

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டராதீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ்.இவர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு, க... மேலும் பார்க்க

``அம்மா நான் திருடல" - உயிரைப் பறித்த 3 சிப்ஸ் பாக்கெட்; குமுறும் பெற்றோர் - என்ன நடந்தது?

மேற்குவங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூரின் பன்சுரா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ். 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனான இவர் மீது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், கோசைன்பர் சந்தையில் இருக்கும் ஒ... மேலும் பார்க்க