செய்திகள் :

``அம்மா நான் திருடல" - உயிரைப் பறித்த 3 சிப்ஸ் பாக்கெட்; குமுறும் பெற்றோர் - என்ன நடந்தது?

post image

மேற்குவங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூரின் பன்சுரா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ். 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனான இவர் மீது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், கோசைன்பர் சந்தையில் இருக்கும் ஒரு திண்பண்ட கடையில் சிப்ஸ் பாக்கெட் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர் வாசிகள் கூறியதாவது, ``கடைக்கு அருகில் இருந்த சிலர், கடைக்காரரான சுபாங்கர் தீட்சித் கடையில் இல்லாத நேரத்தில், சிறுவன் ஒருவர் கடையிலிருந்து சிப்ஸ் பாக்கெட்களை திருடிச் செல்வதாக தெரிவித்திருக்கின்றனர்.

சிறுவன்
சிறுவன்

அதனால் அந்த சிறுவனைக் கண்டுபிடிக்க, சிறுவன் சென்ற வழியில் கடைக்காரரான சுபாங்கர் தீட்சித் சென்று சிறுவனை சிப்ஸ் பாக்கெட்டுடன் பிடித்திருக்கிறார். அப்போது அந்த சிறுவன், 'என்னிடம் ரூ.20 இருக்கிறது. மூன்று சிப்ஸ் பாக்கெட்களுக்கு 15ரூ போக மீதி பணம் வேண்டும்' எனக் கேட்டிருக்கிறார். மீதிப்பணம் கொடுப்பதாக கடைக்காரர் சிறுவனை கடைக்கு அழைத்துச் சென்று, பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

இதைப் பெற்றோரிடம் சிறுவன் கூறியபோது, சிறுவனின் தாயாரும் சிறுவனை கடைக்கு அழைத்துச்சென்று விசாரித்து சிறுவனையே திட்டியிருக்கிறார். இது நடந்து முடிந்த பிறகு வீட்டுக்குச் சென்ற சிறுவன் பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டிருக்கிறான்.

இதை அறிந்த பெற்றோர், சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். இந்த நிலையில், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்." எனக் குறிப்பிட்டனர்.

காவல்துறை
காவல்துறை

சிறுவனின் மரணத்துக்குப் பிறகு அவர் எழுதிய தற்கொலைக் குறிப்பு கிடைத்தது. அதில், ``அம்மா நான் திருடவில்லை" என எழுதி வைத்திருக்கிறார். 'கடைக்கு சிப்ஸ் வாங்கச் சென்ற சிறுவன், கடையில் ஆள் இல்லை என்றதும் சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு, பிறகு பணம் கொடுக்கலாம் என நினைத்திருக்கலாம். அதைப் புரிந்துகொள்ளதாவர்கள், தவறாக நினைத்துப் பேசியிருக்கிறார்கள். அதிகாரப்பூர்வ புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்திருக்கிறோம்' எனக் காவல்துறை தெரிவித்திருக்கிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அதிகாரிகள் சிறுவனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் தமிழக சுகாதார சேவை மையத்தின் 104 எண்ணிற்குத் தொடர்பு கொண்டு பேசலாம்.

பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? அதிர்ச்சி தகவல்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ‘யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் அதன் உரிமையாள... மேலும் பார்க்க

'உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்' - எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று... மேலும் பார்க்க

சென்னை: ஏஐ மூலம் ஆபாச வீடியோ - மணிப்பூர் இளம் பெண்ணை பழிவாங்க ஆசைப்பட்ட டிரைவர் சிக்கியது எப்படி?

மணிப்பூரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2024-ல் சென்னை சூளைமேடு பகுதியில் தங்கியிருந்து சலூன் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் பைக் கால்டாக்ஸி மூலம் அடிக்கடி பயணித்திருக... மேலும் பார்க்க

கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை - பள்ளி மாணவர்கள் உதவியோடு உடலை காட்டில் எரித்த பெண் பிரின்சிபால்

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் அருகில் உள்ள செளசாலா வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கடந்த 15ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் எரிந்து கிடந்... மேலும் பார்க்க

அரியலூர்: பச்சிளங்குழந்தை கழிவறைக்குள் அமுக்கி கொலை; இளம் பெண் கைது; பகீர் பின்னணி என்ன?

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டராதீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ்.இவர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு, க... மேலும் பார்க்க

குழந்தையை கொன்ற கொடூர மாமன்; ஜாமீன் பெற உதவிய வழக்கறிஞர் குடும்பத்தில் சோகம்.. என்ன நடந்தது?

பரமக்குடி எமனேசுவரம் பகுதியை சேர்ந்தவர் தேசிங்குராஜா. மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றின் வரும் இவரது மனைவியின் பெயர் டெய்சி. இவர்களுக்கு இரண்டரை வயதில் லெமோரியா என்ற குழந்தை உள்ளது.நேற்... மேலும் பார்க்க