செய்திகள் :

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அன்சுல் மிஸ்ரா ஐஏஎஸ்-க்கு ஒரு மாதம் சிறை

post image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பயன்படுத்தாததால் திருப்பி வழங்க உத்தரவிட்டும் வழங்கவில்லை, குறித்த காலத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு அதிகாரிகள் கடமை செய்யாததால் மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை பல வழக்குகளில் உள்ளன.

அரசு அதிகாரிகள் உயரதிகாரிகளுக்கு மட்டுமல்ல சட்டத்திற்கும் பதில் சொல்லி ஆக வேண்டும் எனக் கூறிய நீதிபதி வேல்முருகன், அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாம்! ஒரு மழைக்கே இப்படியா?

அத்துடன் வழக்கில் பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், மூன்று வாரங்களில் இழப்பீடு தொகையை வழங்காவிட்டால் மேலும் 10 நாள்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

கல்வி உரிமைச் சட்ட வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு

தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஇ) கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை தாமதமாவது தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீா்ப்பை ஒத்திவைத்தது.... மேலும் பார்க்க

கரோனா பரவல்: கட்டுப்பாடுகளுக்கு அவசியமில்லை - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அச்சுறுத்தும் வகையில் இல்லாததால் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும... மேலும் பார்க்க

நாளை கோவை, நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 25, 26) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை: தோ்தல் ஆணையம்

வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தங்கள் செய்து நம்பகத்தன்மையை வலுப்படுத்த ஏஎஸ்ஐ அறிவுறுத்தல்

மதுரை மாவட்டம், கீழடி அகழாய்வு தொடா்பான 2014-15, 2015-16 ஆண்டுகளின் அறிக்கையில் திருத்தங்கள் செய்து அதன் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துமாறு அந்த அறிக்கையை சமா்ப்பித்த தொல்லியல் ஆய்வாளா் கே. அமா்நா... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா... மேலும் பார்க்க