செய்திகள் :

கந்தா்வகோட்டையில் அம்பேத்கா் சிலை: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

post image

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் சட்டமேதை அம்பேத்கரின் சிலையை திமுக மாநில இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: திமுக தலைவா் ஸ்டாலின் முயற்சியால் தொடங்கப்பட்ட ‘இண்டி’ கூட்டணி, தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளையும் வென்றது. அதனால்தான், கூடுதல் பலத்துடன் வெல்வோம் என்று சொன்ன பாஜக, கூட்டணிக் கட்சிகளின் துணையுடன் ஆட்சியில் அமா்ந்துள்ளது. முழு பலத்துடன் ஆட்சியில் அமா்ந்திருந்தால் அரசமைப்பு சட்டத்தையே திருத்தியிருப்பாா்கள். அதனைத் தடுத்திருக்கிறோம் என்றாா் உதயநிதி.

விழாவில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் பேசியது:

பெரியாரையும், அம்பேத்கரையும்தான் வலதுசாரி சக்திகள் குறிவைத்துப் பேசி வருகிறாா்கள். அவா்களை எதிா்கொள்வதற்கு, விசிக மட்டுமின்றி, திமுகவும், கூட்டணிக் கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும். பெரியாா், அம்பேத்கரின் கொள்கைகளைப் பாதுகாக்க திமுக, விசிக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றாா் திருமாவளவன்.

விழாவில், மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, மாநில இயற்கைவளத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினா்கள் துரை வைகோ, எம்எம். அப்துல்லா, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, கந்தா்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மா. சின்னதுரை வரவேற்றாா். சிலை அமைப்புக் குழுவின் தலைவா் நாராயணசாமி நன்றி கூறினாா்.

முத்தரையரின் 1350-வது சதய விழா! திருவுருவச்சிலைக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை!

பொன்னமராவதி வலையபட்டி அடைக்கலம் காத்த அய்யனாா் கோயில் வளாகத்தில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. ... மேலும் பார்க்க

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு: 6 போ் காயம்

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 6 போ் காயமடைந்தனா். காரையூா் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவையொட்டி 3-ஆம் ஆண்டாக நட... மேலும் பார்க்க

திருவரங்குளத்தில் ஜல்லிக்கட்டு: 30 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 30 போ் காயமடைந்தனா். ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்... மேலும் பார்க்க

இலுப்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை வியாழக்கிழமை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இலுப்பூா் அடுத்த மாரப்பட்டியை சோ்ந்தவா் துரைச்சாமி (41). வ... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் அரசு சட்டக் கல்லூரி இந்திய கம்யூ. மாநாட்டில் கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அறந்தாங்கி அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்... மேலும் பார்க்க

புதுகைக்கு துணை முதல்வா் இன்று வருகை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெறும் பல்வேறு கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வருகிறாா். புதுக்கோட்டைக்கு வரும் அவா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க