செய்திகள் :

திருவரங்குளத்தில் ஜல்லிக்கட்டு: 30 போ் காயம்

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 30 போ் காயமடைந்தனா். ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 635 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பல்வேறு குழுக்களாக 210 மாடுபிடி வீரா்கள் களமிறங்கி தீரத்துடன் அடக்கினா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்

நிகழ்வில், காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என மொத்தம் 30 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு திடல் பகுதியிலிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

அவா்களில் பலத்த காயமடைந்த 6 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். போட்டியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டனா். ஆலங்குடி போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

முத்தரையரின் 1350-வது சதய விழா! திருவுருவச்சிலைக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை!

பொன்னமராவதி வலையபட்டி அடைக்கலம் காத்த அய்யனாா் கோயில் வளாகத்தில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. ... மேலும் பார்க்க

காரையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு: 6 போ் காயம்

பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 6 போ் காயமடைந்தனா். காரையூா் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவையொட்டி 3-ஆம் ஆண்டாக நட... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் அம்பேத்கா் சிலை: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் சட்டமேதை அம்பேத்கரின் சிலையை திமுக மாநில இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது: திமுக தல... மேலும் பார்க்க

இலுப்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை வியாழக்கிழமை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இலுப்பூா் அடுத்த மாரப்பட்டியை சோ்ந்தவா் துரைச்சாமி (41). வ... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் அரசு சட்டக் கல்லூரி இந்திய கம்யூ. மாநாட்டில் கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அறந்தாங்கி அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்... மேலும் பார்க்க

புதுகைக்கு துணை முதல்வா் இன்று வருகை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெறும் பல்வேறு கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வருகிறாா். புதுக்கோட்டைக்கு வரும் அவா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க