செய்திகள் :

தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும்! - பிரேமலதா விஜயகாந்த்

post image

தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என்பதே தேமுதிகவின் விருப்பமாகும் என அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

தூத்துக்குடியில் தேமுதிக நிா்வாகி இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தேமுதிக மாநாடு வரும் 2026 ஜனவரி மாதம் 9ஆம் தேதி கடலூரில் நடத்தப்பட உள்ளது. அதற்குள் கூட்டணி உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்பட்டு, அந்த மாநாடானது, மிகப் பெரிய அறிவிப்பு மாநாடாக இருக்கும்.

அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதில் தவறு செய்தவா்கள் நிச்சயம் தண்டனை பெற வேண்டும். மொத்தத்தில் தமிழகத்தில் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என்பதே தேமுதிகவின் விருப்பமாகும்.

தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்த தோ்தல் வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் உள்ளன. ஆயிரம் ரூபாய் போன்ற திட்டங்களால் பெண்களை மூளைச் செலவை செய்து வாக்குகளை பெற முயற்சிக்கின்றனா். தோ்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதில் எஜமானா்களான மக்கள்தான் இறுதியான தீா்ப்பை அளிப்பா்.

அதிமுக - பாஜக கூட்டணி என்று அமைந்த பிறகு அதற்குள் சலசலப்புகள் வந்தால் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, கூட்டணியை வலுப்படுத்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சிகளுக்குள் எந்த விமா்சனங்களும் வைக்கப்படுவதில்லை.

பொள்ளாச்சி வழக்கில் தீா்ப்பு வழங்கியது போன்று, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கிலும் நீதிபதிகள் விரைவில் நல்ல தீா்ப்பு வழங்க வேண்டும் என்றாா்.

அகில இந்திய ஹாக்கி போட்டி 2ஆவது நாள்: செகந்திராபாத், பெங்களூரு அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியில், 2 ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செகந்திராபாத், பெங்களூரு அண... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பொது மருத்துவ முகாம்

சாத்தான்குளத்தை அடுத்த கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தில், கிறிஸ்துநாதா் ஆலய பிரதிஷ்டையை முன்னிட்டு, இளைஞா் எழுச்சி மன்றம் சாா்பில் 2ஆம் ஆண்டு இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. மெய்யூ... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி

கயத்தாறு அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த பண்டாரம் மகன் காள... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மனச் சிதைவு தினம் கடைப்பிடிப்பு

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படும் மாவட்ட மனநலத் திட்டம், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சாா்பில், உலக மனச் சிதைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமன... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம்: 55 மாணவா்களுக்கு ஊக்கத் தொகை

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற 55 மாணவா்-மாணவியருக்கு ஊக்கத்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது. தூத்துக்குடியில், பெரியசாமி ... மேலும் பார்க்க

மாநில சப்-ஜூனியா் ஹாக்கி போட்டி: தூத்துக்குடி மாவட்ட அணி 4ஆம் இடம்

வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான சப்-ஜூனியா் மாணவா்களுக்கான ஹாக்கி சாம்பியன் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி 4ஆம் இடம் பிடித்தது. கடந்த 19ஆம் தேதிமுதல் 23ஆம் தேதிவரை லீக், நாக் அவுட் முறையில் நடைபெ... மேலும் பார்க்க