செய்திகள் :

இந்தியா - பாகிஸ்தான் - சீனா! டிராகனின் இரட்டை விளையாட்டு!

post image

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், பாகிஸ்தானுக்கு சீனா முழு ஆதரவையும் வழங்கத் தயங்குகிறது. காரணம் என்னவென்றால், இந்த ஆதரவினால், சீனாவின் நன்மதிப்பு குறைந்து விடும் என்பதால்தான் என்று உலக அரங்கில் பேசப்பட்டு வருகிறது.

காரணங்களாக அவர்கள் கூறுவது:

சீனா பெரும்பாலும் வெளிப்படையாக ஆதரவளிக்காமல், மறைமுகமாகவே ஆதரவளிக்கிறது. மறைமுகமான அழுத்தத்தின் மூலம் சமிக்ஞையைத்தான் சீனா ஆதரிக்கிறது. ஆயுதங்கள் விநியோகம், ஐ.நா.வில் ஆதரவு முதலானவை மூலம் சீனாவுக்கு ஆதரவளிப்பதில் சீனா கவனமாக செயல்படுகிறது எனலாம்.

உலகளவில் பயங்கரவாதத்தை சீனா கண்டிக்கிறது. அதே வேளையில், பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் மேற்கொள்ளும் தடை நடவடிக்கைகளை, தனது ராஜதந்திர செயல்கள் மூலம் தடுத்து வருகிறது. உலகுக்கு அமைதியின் காதலனாக இருக்கும் அதே வேளையில், பாகிஸ்தானுக்கு விசுவாசத்தையும் நம்பகத்தன்மையையும் அளிக்கிறது. இது நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய இரட்டை விளையாட்டைக் காட்டுகிறது.

இந்தியாவுடன் ஆண்டுதோறும் பெரியளவிலான வணிகத்தை சீனா கொண்டுள்ளது. வருடாந்திர வர்த்தகம், 140 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருப்பதால், இந்தியாவுக்கு எதிரான வெளிப்படையான ஆதரவு, சீனாவை கடுமையாகத் தாக்கும். சீனாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இத்தகைய குறிப்பிட்ட பொருளாதார கூட்டாண்மையை சீனா ஒருபோதும் ஆபத்தில் தள்ள முயற்சி செய்யாது.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலால், சீனாவின் பில்லியன் டாலர் கணக்கான முதலீடுகளை நேரடியாகவும் கடுமையாகவும் பாதிக்கும். இதனிடையே, பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மீதான தாக்குதல்களாலும், பாகிஸ்தான் மீது சீனாவுக்கு மனக்கசப்பு இருந்து வந்தது.

2020 ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - சீனா இடையே எல்லைப் பதற்றம் உருவானது. இருப்பினும், இந்தப் பதற்றத்தைக் குறைக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், தற்போது பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு சீனா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால், அதன் தாக்கத்தையும் சீனா அறிந்திருக்கும். இதன் மூலம் சீன தொழில்நுட்பங்களுக்கு இந்தியா அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கும் அபாயம் இருப்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கலாம்.

உலகின் தெற்குப்பகுதியில் வளர்ச்சி, நிலைத்தன்மை, அமைதியான வாழ்வைப் பாதுகாக்கும் கூட்டணியின் தலைவராகும் முயற்சியில், தன்னை சீனா ஈடுபடுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு வெளிப்படையான ஆதரவு, இந்த நல்ல பிம்பத்தை கடுமையான குறைமதிப்புக்கு உள்படுத்தும். அமைதியை விரும்பும் நாடுகளிடையே நம்பிக்கையை அழிக்கும்.

அமெரிக்காவுடன் இந்தியா நல்லுறவு கொண்டிருப்பதை சீனா விரும்பவில்லை. தற்போது, பாகிஸ்தானுக்கு சீனா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால், அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு மேம்பட்டு விடும் என்பதையும் நன்கு அறிந்து வைத்திருக்கிறது.

எக்ஸ் தளம் திடீரென முடங்கியது!

சமூக ஊடகமான எக்ஸ் தளம் திடீரென முடங்கியதாக பயனர்கள் அவதி தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைதளம், செயலி இரண்டும் முடங்கியதாக புலம்பி வருகின்றனர். சுமார் ஒரு மணிநேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், உள்ளடக்கம் இர... மேலும் பார்க்க

மங்கோலியாவில் வேகமாகப் பரவும் தட்டம்மை! 3000-ஐ தாண்டிய பாதிப்புகள்!

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் 3000-க்கும் அதிகமான தட்டம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.மங்கோலியா நாட்டில் தட்டம்மை தொற்றுப் பரவல் வேகமெடுத்து வரும் சூழலில் அந்நாட்டில் இதுவரை 3,042 பேர் பாதி... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் இடையே 390 போர்க் கைதிகள் பரிமாற்றம்!

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் முதல்முறையாக போர்க் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. ரஷியா - உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழலில், துருக்கியில் கடந... மேலும் பார்க்க

ஜெர்மனியில் பெண் நடத்திய கத்திக்குத்து சம்பவத்தில் 18 பேர் படுகாயம்!

ஜெர்மனியின் ஹம்பர்க் பகுதியில், ஒரு பெண் நடத்திய கத்திக் குத்துச் சம்பவத்தில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்த... மேலும் பார்க்க

விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலா்) கடன் வழங்கப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு விரிவுபடுத்தப்பட்ட ந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பள்ளிப்பேருந்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பள்ளிப்பேருந்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. பலூசிஸ்தான் குஸ்தார் மாவட்டத்தில், கடந்த மே 21 ஆம் தேதியன்று ராணுவப் பள... மேலும் பார்க்க