செய்திகள் :

ரூ.11.50 லட்சத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?

post image

கியா நிறுவனம் கேரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

என்ஜின் மற்றும் பவர்டிரெய்ன்

கியா கேரன்ஸ் கிளாவிஸ் மூன்று விதமான என்ஜின் விருப்பங்களைக் கொண்டுள்ளது. 157 குதிரைத்திறன் மற்றும் 253 Nm டார்க்கை வழங்கும் 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 113 குதிரைத் திறன் மற்றும் 143.8 Nm டார்க்கை வழங்கும் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 113 குதிரைத்திறன் மற்றும் 250 Nm டார்க்கை வழங்கும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆகியவை விருப்பத் தேர்வுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

உட்புற அம்சங்கள்

22.62 அங்குல இரட்டைத் திரை அமைப்புடன், இதில் 10.25-அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் 10.25-அங்குல தொடுதிரை உள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

விலை எவ்வளவு?

கியா கேரன்ஸ் கிளாவிஸ் காரில் HTE, HTE (O), HTK, HTK (+), HTK + (O), HTX, மற்றும் HTX + என 7 வகைகள் உள்ளன. இதன் விலை ரூ.11.50 லட்சத்தில் தொடங்கி ரூ.18 லட்சம் வரை உள்ளது.

இதையும் படிக்க: எப்படி இருக்கிறது புதிய டொயோடா எஸ்யுவி? ரூ.25 லட்சத்தில் அறிமுகம்!

கேரளம்: கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்! பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது.கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

நீதி ஆயோக் கூட்டம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டம், தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்ற... மேலும் பார்க்க

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைதுகள் 76 ஆக உயர்வு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கைது செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

பிகாரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ள அஹியாபூர் கிராமத்தில் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலைய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் ராகுல் நேரடி ஒத்துழைப்பு! பாஜக கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பூஞ்ச் பகுதியைப் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு சோகமான நிகழ்வு என்று குறிப்பிட... மேலும் பார்க்க