செய்திகள் :

பினராயி விஜயனுக்குப் பிறந்தநாள்: பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து!

post image

கேரள முதல்வர் பினராயி விஜயனின் 80வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது 80வது பிறந்தநாளாகும். முதல்வர் பினராயி விஜயன் அலுவலகப் பணிகளில் ஈடுபடுவதால் முறையான கொண்டாட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றதன் நான்காவது ஆண்டு நிறைவை மாநிலம் கொண்டாடியதன் ஒரு நாளுக்குப் பிறகு அவரது பிறந்தநாள் வந்துள்ளது.

அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கேரள முதல்வருக்கு சமூக ஊடகங்களின் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவில்,

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இடதுசாரித் தலைவர் நீண்ட ஆரோக்கியமான வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இறைவன் அவருக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆசிர்வதிக்கட்டும் என்று அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தனது சமூக ஊடகப் பக்கத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வு மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டும், வரவிருக்கும் ஆண்டு ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் நிறைந்ததாக இருக்கட்டும்" என்று அவர் கூறினார்.

இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்தியா

இந்தியர்கள் ஒன்றுபட்டிருந்தாலும், நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்கும் பழக்கம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். வெளியு... மேலும் பார்க்க

அசாமில் பாக். ஆதரவாளர்களின் கைதுகள் 76 ஆக உயர்வு!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கைது செய்யப்பட்டு வரும் பாகிஸ்தான் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

பிகாரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள்.பிகார் மாநிலம், பக்சர் மாவட்டத்தில் உள்ள அஹியாபூர் கிராமத்தில் மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலைய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் ராகுல் நேரடி ஒத்துழைப்பு! பாஜக கண்டனம்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பூஞ்ச் பகுதியைப் பார்வையிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை ஒரு சோகமான நிகழ்வு என்று குறிப்பிட... மேலும் பார்க்க

மக்கள் பீதியடைய வேண்டாம்: கர்நாடக சுகாதார அமைச்சர்

கர்நாடகத்தில் கரோனா தொற்று படிபடியாக அதிகரித்துவரும் நிலையில், மக்கள் பீதியடைய அவசியமில்ல என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், ... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்பு

ஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டின் செரைகேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக மீட்கப... மேலும் பார்க்க