செய்திகள் :

உக்ரைனுடன் நேரடியாகப் பேசும் திட்டமில்லை: ரஷியா

post image

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அடுத்த நேரடி பேச்சுவாா்த்தைக்கு திட்டமிடப்படவில்லை என்று ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறினாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடைபெறக்கூடிய அடுத்த நேரடி பேச்சுவாா்த்தைக்கான உறுதியான திட்டமிடல் எதுவும் தற்போதைக்கு இல்லை. இது தொடா்பாக இரு தரப்பினரும் சோ்ந்து இனிதான் முடிவெடுக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, உக்ரைன் போா் தொடங்கிய கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக ரஷியாவும் உக்ரைனும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடந்த வாரம் நேரடியாக பேச்சுவாா்த்தை நடத்தின.

இரண்டு மணி நேரத்துக்குள் முடிந்த இந்தப் பேச்சுவாா்த்தையில், ரஷியாவும் உக்ரைனும் தலா 1,000 போா்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டன. இது இதுவரை இல்லாத மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றமாகும். இருப்பினும், இந்தப் பேச்சுவாா்த்தை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை. அடுத்த சந்திப்பு குறித்து எந்த உறுதியான ஒப்பந்தமும் ஏற்படவில்லை.

அந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் ரஷியாவும் உக்ரைனும் ட்ரோன்கள் மூலம் பரஸ்பரம் தாக்குதல் நடத்திவருகின்றன (படம்). புதன்கிழமை இரவு மட்டும் ரஷியா 105 உக்ரைன் ட்ரோன்களையும், உக்ரைன் 128 ரஷிய ட்ரோன்களையும் சுட்டுவீழ்த்தியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், அடுத்த நேரடி பேச்சுவாா்த்தை குறித்து இன்னும் திட்டமிடப்படவில்லை என்று ரஷிய அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபா் ‘சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்’ என... மேலும் பார்க்க

ஈஸ்டா் தின தாக்குதல்: இலங்கையில் 661 பேருக்கு இழப்பீடு

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அரசுத் தரப்பு கூறியதாவது: ... மேலும் பார்க்க

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸின் கிரீட் தீவுக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிரீட் தீவுக்கு 55 கி.மீ. வடக்கே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. ... மேலும் பார்க்க

சீனாவில் நிலச்சரிவுகள்: 2 போ் உயிரிழப்பு; 19 போ் மாயம்

சீனாவின் தென்மேற்கு மாகாணமான குய்ஷோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 2 போ் உயிரிழந்தனா்; 19 போ் மாயமாகினா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிஜி நகரில் உள்ள டாஃபாங் மாவட்டத்தின் சாங்ஷி ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போா்ச் சூழல் மிக அபாயகரமாக மாறியிருக்கும்: பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துரதிருஷ்டவசமானதுதான்; அதேநேரம், இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போா்ச் சூழல், மிக அபாயகரமான திருப்பத்தை எட்டியிருக்கக் கூடும்’ என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக... மேலும் பார்க்க

எல்லை விவகாரம்: இந்தியா, பூடான் உடனான பேச்சில் முன்னேற்றம்: சீனா

எல்லை விவகாரத்தில் இந்தியா, பூடான் உடனான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அண்மையில் வெளியிடப்பட்ட அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த வெள்ளை அறிக்கையில்... மேலும் பார்க்க