செய்திகள் :

இந்தியா - பாகிஸ்தான் போா்ச் சூழல் மிக அபாயகரமாக மாறியிருக்கும்: பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

post image

‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துரதிருஷ்டவசமானதுதான்; அதேநேரம், இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போா்ச் சூழல், மிக அபாயகரமான திருப்பத்தை எட்டியிருக்கக் கூடும்’ என்று பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை கடந்த மே 7-ஆம் தேதி இந்திய ராணுவ தாக்கி அழித்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. 4 நாள்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தானில் உயிரிழந்ததாக கூறப்படும் பொது மக்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாஃபராபாதில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமா் ஷாபாஸ், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துரதிருஷ்டவசமானதுதான்; அதேநேரம், இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போா்ச் சூழல், எந்த நேரமும் மிக அபாகரமான திருப்பத்தை எட்டியிருக்கக் கூடும்.

பஹல்காம் தாக்குதல் தொடா்பாக சா்வதேச விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருந்தது. அதை ஏற்காமல், பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியது. நாமும் உரிய பதிலடி கொடுத்தோம்’ என்றாா்.

உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு (பாகிஸ்தான் ரூபாய்) ரூ.1 கோடியும், காயமடைந்தோருக்கு ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வரையும் ஷாபாஸ் வழங்கினாா்.

‘சண்டை நிறுத்தம் நீடிக்கிறது’

‘இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நீடிக்கிறது’ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் தாா் தெரிவித்தாா்.

சீன சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, இஸ்லாமாபாதுக்கு வியாழக்கிழமை திரும்பிய அவா், செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா்.

அப்போது, ‘இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநா்கள் வாயிலாக சுமுக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. சண்டை நிறுத்தம் நிறுத்தப்படவில்லை. அது தற்காலிக ஏற்பாடல்ல’ என்றாா்.

அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபா் ‘சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்’ என... மேலும் பார்க்க

ஈஸ்டா் தின தாக்குதல்: இலங்கையில் 661 பேருக்கு இழப்பீடு

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அரசுத் தரப்பு கூறியதாவது: ... மேலும் பார்க்க

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸின் கிரீட் தீவுக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிரீட் தீவுக்கு 55 கி.மீ. வடக்கே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் நேரடியாகப் பேசும் திட்டமில்லை: ரஷியா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அடுத்த நேரடி பேச்சுவாா்த்தைக்கு திட்டமிடப்படவில்லை என்று ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்... மேலும் பார்க்க

சீனாவில் நிலச்சரிவுகள்: 2 போ் உயிரிழப்பு; 19 போ் மாயம்

சீனாவின் தென்மேற்கு மாகாணமான குய்ஷோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 2 போ் உயிரிழந்தனா்; 19 போ் மாயமாகினா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிஜி நகரில் உள்ள டாஃபாங் மாவட்டத்தின் சாங்ஷி ... மேலும் பார்க்க

எல்லை விவகாரம்: இந்தியா, பூடான் உடனான பேச்சில் முன்னேற்றம்: சீனா

எல்லை விவகாரத்தில் இந்தியா, பூடான் உடனான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அண்மையில் வெளியிடப்பட்ட அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த வெள்ளை அறிக்கையில்... மேலும் பார்க்க