செய்திகள் :

எல்லை விவகாரம்: இந்தியா, பூடான் உடனான பேச்சில் முன்னேற்றம்: சீனா

post image

எல்லை விவகாரத்தில் இந்தியா, பூடான் உடனான பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அண்மையில் வெளியிடப்பட்ட அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீனாவுடன் நில எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் 14 நாடுகளுடன் எல்லை பிரச்னை இருந்தது. இதில் 12 நாடுகளுடன் அந்தப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய 2 நாடுகளான இந்தியா, பூடானுடன் தொடா்ந்து நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுடன் முறையாக வரையறுக்கப்படாத 3,488 கி.மீ. எல்லையை சீனா பகிா்ந்து வரும் நிலையில், எல்லை பிரச்னைகள் தொடா்பாக இருநாட்டு சிறப்பு பிரதிநிதிகள் இடையே 23 சுற்றுகளாகப் பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது.

பூடானுடன் சுமாா் 400 கி.மீ. எல்லையை சீனா பகிா்ந்து வரும் நிலையில், எல்லை பிரச்னைகள் தொடா்பாக இருநாடுகளும் 25 சுற்றுகளாகப் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளன.

பெரும் அதிகாரப் போட்டியின் மையமாக ஆசிய-பசிபிக் பிராந்தியம் மாறியுள்ளது. இந்த பிராந்தியத்தில் ராணுவ கூட்டணிகளை சில நாடுகள் வலுப்படுத்தியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய-சீன உறவுக்கு பரஸ்பர

மரியாதை, நலன் அவசியம்: இந்தியா

புது தில்லி, மே 22: இந்தியா-பாகிஸ்தான் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதலின்போது இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சீன ஆயுதங்களை பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தியது. இந்நிலையில், புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலின் வாராந்திர செய்தியாளா்கள் சந்திப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது பாகிஸ்தானுக்கு சீனா ராணுவ உதவி அளிக்கும் நிலையில், அது இந்திய-சீன உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘கடந்த மே 10-ஆம் தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியிடம் பேசினாா். அப்போது பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வாங் யியிடம் தோவல் எடுத்துரைத்தாா்.

பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, பிரச்னைகளை உணா்ந்து செயல்படுதல் ஆகியவையே இந்திய-சீன உறவுக்கு அடித்தளமாக நீடிக்கிறது என்பது சீனாவுக்குத் தெரியும்.

பாகிஸ்தானுக்கு துருக்கி ராணுவ உதவி அளித்து வரும் நிலையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு அளிக்கும் ஆதரவை கைவிட வேண்டும்; பல பதிற்றாண்டுகளாக அந்நாடு பாதுகாத்து வரும் பயங்கரவாத சூழலுக்கு எதிராக நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் துருக்கி வலியுறுத்த வேண்டும்’ என்றாா்.

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!

வங்கதேச ராணுவத் தளபதியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்தாண்டு நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தால் பிரதமா... மேலும் பார்க்க

ரஷியாவில் ட்ரோன் தாக்குதல்: கனிமொழி விமானம் தாமதம்!

ரஷியாவின் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் சென்ற விமானம் தாமதமாக தரையிறங்கியுள்ளது.ரஷியா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வ... மேலும் பார்க்க

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை!

அமெரிக்க அரசுடன் ஏற்பட்டிருக்கும் மோதலைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களை சேர்க்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான அங்கீகாரத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.இதனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற... மேலும் பார்க்க

அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபா் ‘சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்’ என... மேலும் பார்க்க

ஈஸ்டா் தின தாக்குதல்: இலங்கையில் 661 பேருக்கு இழப்பீடு

இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டா் தின தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு அந்த நாட்டு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அரசுத் தரப்பு கூறியதாவது: ... மேலும் பார்க்க

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸின் கிரீட் தீவுக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிரீட் தீவுக்கு 55 கி.மீ. வடக்கே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது. ... மேலும் பார்க்க