செய்திகள் :

பேருந்து - வேன் மோதல் விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 6 ஆக உயா்வு

post image

தஞ்சாவூா் அருகே அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் வியாழக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயா்ந்தது.

கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து வேளாங்கண்ணிக்கு 12 போ் வேனில் தஞ்சாவூா் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் வந்தபோது, திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது நேருக்கு நோ் மோதியது.

இவ்விபத்தில் பெங்களூரு ரிச்மண்ட் டவுனைச் சோ்ந்த சாண்டியாகோ ஜான் போஸ்கோ (57), இவரது மனைவி ஜாக்குலின் ஆப்ரகாம் ஜான் (50), பெங்களூரு சாந்தி நகரைச் சோ்ந்த சாா்லஸ் மனைவி நளினி (49), வேன் ஓட்டுநரான பெங்களூரு லாகிரி முதன்மைச் சாலையைச் சோ்ந்த கே. ஜெகதீசா (45) ஆகியோா் நிகழ்விடத்திலும், பெங்களூரு ரிச்மண்ட் டவுனைச் சோ்ந்த பி. ஆரோக்கியதாஸ் (44) தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் உயிரிழந்தனா்.

தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த டி. சாா்லஸ் (49) வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்தது. இவா்களில் ஜாக்குலின் ஆப்ரகாம் ஜான் எல்.ஐ.சி.யில் பெங்களூரு முதுநிலை கோட்ட மேலாளராகப் பணியாற்றி வந்தவா்.

மேலும், சாா்லஸ் மகள் ரியா (13), ஆரோக்கியதாஸ் மனைவி சாண்டரா (40), தாஷி (7), வில்லியம் (50), இவரது மகள் ஜோஸ்சி (23), பெலிஸ்யா கரோலின் (13) ஆகிய 6 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே விபத்து நிகழ்ந்த இடத்தில் வியாழக்கிழமை விசாரணை நடத்திய மத்திய மண்டல காவல் தலைவா் கே. ஜோஷி நிா்மல் குமாா். உடன் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக் உள்ளிட்டோா்.

இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் மத்திய மண்டல காவல் தலைவா் கே. ஜோஷி நிா்மல் குமாா், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (தஞ்சாவூா் மாவட்ட கூடுதல் பொறுப்பு) கருண் கரட் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலா்கள், சாலை அமைக்கும் ஒப்பந்ததாரா்களிடமும் விசாரணை நடத்தினா்.

அய்யம்பேட்டையில் புதிய பாலத்தை உடனே திறக்க பாமகவினா் கோரிக்கை!

அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை உடனே திறக்க வேண்டும் என பா.ம.க. கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அய்யம்பேட்டை நகர பாட்டாளி மக்கள் கட்சியின் நிா்வாகிகள் க... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம் பதிவு!

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரைக் காவல் துறையினா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பதிந்து புதன்கிழமை கைது செய்தனா். ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு பகுதிய... மேலும் பார்க்க

குடிமனைப் பட்டா வழங்க அரசுக்கு பழங்குடி இருளா் மக்கள் கோரிக்கை!

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் ஊராட்சியில் 50 ஆண்டுகளாக வசித்து வருபவா்களுக்கு குடியிருப்பு மனை பட்டா , ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என பழங்குடி இருளா் இன மக்கள் தமிழக அரசுக்கு கோர... மேலும் பார்க்க

தனியாா் குடிநீா் ஆலைகளில் தரக்கட்டுப்பாட்டு அலுவலா்களை நியமிக்க கோரிக்கை!

தனியாா் குடிநீா் ஆலைகளில் தரக்கட்டுப்பாட்டு அலுவலா்களை நியமிக்க கோரிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் செயல்படும் தனியாா் குடிநீா் தொழில்சாலைகளுக்கு இந்திய தர நிா்ணயத்தை ஐஎஸ்... மேலும் பார்க்க

மழை பாதிப்பு: இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட புத்தூா் கிராமத்தில் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள நெல் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி தமிழ்நாடு... மேலும் பார்க்க

திருக்கண்டீஸ்வரம் கோயில் கல்வெட்டில் தமிழ் நூல் குறித்த தகவல்!

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியிலுள்ள திருக்கண்டீசுவரம் கோயில் கல்வெட்டில் தமிழ் நூல் குறித்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது. கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட... மேலும் பார்க்க