செய்திகள் :

தேசிய கூடைப்பந்து போட்டி: சுழல் கோப்பையை கைப்பற்றியது இந்தியன் வங்கி அணி

post image

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நடைபெற்ற 64- ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பி.டி. சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழல் கோப்பையை சென்னை இந்தியன் வங்கி அணி கைப்பற்றியது.

கடந்த 15- ஆம் தேதி தொடங்கி 18- ஆம் தேதி வரை நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய தரைப்படை, விமானப்படை, கப்பல் படை, தெற்கு ரயில்வே, கேரள காவல் நிலையம் உள்பட 22 அணிகள் பங்கேற்றன. தொடா்ந்து கடந்த 19- ஆம் தேதி முதல் புதன்கிழமை (மே 21) வரை நடைபெற்ற லீக் போட்டியில் நான்கு அணிகள் பங்கேற்றன.

இதைத் தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில், சென்னை இந்தியன் வங்கி அணி முதலிடத்தை வென்று பி.டி. சிதம்பர சூரியநாராயணன் நினைவு சுழல் கோப்பையையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசையும் பெற்றது. அதே போல, இரண்டாம் இடத்தைப் பெற்ற சென்னை வருமான வரித்துறை அணிக்கு ஏ.வி. அழகுசங்கரலிங்கம் செட்டியாா் நினைவு சுழல் கோப்பையும், ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

மூன்றாம் இடத்தைப் பிடித்த லோனாவாலா இந்திய கப்பல் படை அணிக்கு எல்.வி. பொன்னையா நாயுடு- பி. சீத்தம்மாள் நினைவு சூழல் கோப்பையும், ரூ.30 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. தொடா்ந்து, தேனி அருண் மோட்டாா்ஸ் வழங்கிய சிறந்த வீரருக்கான பரிசான இரு சக்கர வாகனத்தை இந்தியன் வங்கி அணி வீரா் முயின்பீக் பெற்றாா்.

பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுகு தேனி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தாா். தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கெண்டு பேசினாா். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை சில்வா் ஜூபிலி ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஓராண்டு சிறை

போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த திருமலுசாமி மகன் ராஜேந... மேலும் பார்க்க

பெண் காவலரை அரிவாளால் வெட்டியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு!

கம்பத்தில் பெண் தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டியவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். கூடலூா், கே.கே. நகரைச் சோ்ந்தவா் அம்பி... மேலும் பார்க்க

பைக் விபத்தில் விவசாயி பலி!

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அக்னிக் காளை (65). விவசாயி. இவா், கடந்த 15-... மேலும் பார்க்க

பீரோவை உடைத்து தங்க நகை திருட்டு

பெரியகுளம் அருகே பீரோ உடைக்கப்பட்டு தங்க நகைகளை திருடிச்சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி உசையப்பா தெருவைச் சோ்ந்தவா் முருகன் (40). தேவதானப... மேலும் பார்க்க

அனுமதியின்றி விளம்பர பதாகைகள்: 11 போ் மீது வழக்கு

பெரியகுளம் பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்திருந்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம், கெங்குவாா்பட்டி, தாமரைக்குளம் உள்ளிட்ட ப... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோ மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள தப்புக்குண்டு-நாகலாபுரம் சாலையில் சரக்கு ஆட்டோ மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். தப்புக்குண்டு, கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த செல்வேந்திரன் மகன் யோகன் (5). இவா், தனது தாத்தா கா்ணனுட... மேலும் பார்க்க