செய்திகள் :

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்

post image

அதிமுக தலைமை நிலையச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் வந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவையை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஜூலை 30 ஆம் தேதி குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்யப் போவதாகவும், ரூ.1 கோடி பணம் கேட்டு கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

கீழடியின் உண்மைக்கு என்றென்றும் எதிரி பாஜக: சு.வெங்கடேசன் எம்.பி.

இது தொடர்பாக கோவை புறநகர் மாவட்ட அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலாளர் தாமோதரன், மற்ற வழக்குரைஞர்களுடன் இணைந்து மாவட்ட காவல் ஆணையாளரிடம் வெள்ளிக்கிழமை புகார் மனு அளித்தார்.

அதில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் ரூ.1 கோடியை கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மூன்று மாதங்களுக்குள் எஸ்.பி.வேலுமணியின் குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்பட்டு உள்ளது. இந்த மிரட்டல் கடிதம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறையினர் இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி, மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனா்.

புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சோனியா, ராகுலுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நெல்லை, தென்காசி, குமரி உள்பட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்த... மேலும் பார்க்க

வேலூரில் பெண்ணை அடித்துக் கொன்று இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

வேலூர்: வேலூரில் பெண்ணை அடித்துக் கொலை செய்து விட்டு இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வேலூர் சின்னஅல்லா... மேலும் பார்க்க

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், வெல்லும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தை ஆட்சி ப... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை(மே 24) கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுடன் (மே 24) முடிவடைகிறது. தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வே... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ரயில் பயணச் சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது: ஆா்பிஎஃப் அதிரடி

கோவை போத்தனூரில் சட்டவிரோதமாக ரயில் பயணச் சீட்டுகள் விற்பனை செய்த ஒருவரை ரயில்வே போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 26,230 மதிப்புள்ள பயணச் சீட்டுகளை பறிமுதல் ச... மேலும் பார்க்க