செய்திகள் :

இனி ’மைசூர் பாக்’ இல்ல, 'மைசூர் ஸ்ரீ'.... இனிப்புகளின் பெயரிலிருந்து ’பாக்’ என்ற சொல் நீக்கம்

post image

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வந்த பதற்றங்களை அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தற்போது பதட்டமான சூழல் தணிந்து வருகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கடையில் மைசூர் பாக், என்ற இனிப்பின் பேரில் இருக்கும் பாக் என்ற சொல்லை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஸ்ரீ என பெயர் மாற்றியுள்ளனர்.

Mysore Pak

இது குறித்து இனிப்பு கடையின் உரிமையாளர் கூறியதாவது "எங்கள் இனிப்புப் பண்டங்களின் பெயர்களில் இருந்து 'பாக்' என்ற வார்த்தையை நீக்கிவிட்டோம். 'மோதி பாக்' என்பதை 'மோதி ஸ்ரீ' என்றும், 'கோண்ட் பாக்' என்பதை 'கோண்ட் ஸ்ரீ' என்றும், 'மைசூர் பாக்' என்பதை 'மைசூர் ஸ்ரீ' என்றும் பெயர் மாற்றியுள்ளோம்," என்று என்டிடிவிக்கு கடை உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இனிப்புகளில் உள்ள ”பாக்” என்ற சொல் பாகிஸ்தானை குறிக்கவில்லை மாறாக அந்த இனிப்புகளின் செயல்முறையில் பயன்படுத்தப்படும் சர்க்கரை பாகை குறிப்பதாக என்டிடிவி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள பிரபல பேக்கரி கடையான `கராச்சி பேக்கரி' கடந்த சில நாள்களுக்கு முன்பு தாக்கப்பட்டது. பாகிஸ்தானின் பெயர் இருந்ததாலேயே இந்த கடை தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் கராச்சி பேக்கரி தரப்பில் "இது நூறு சதவிகிதம் இந்திய பிராண்ட், 1953 ஆம் ஆண்டு இந்தியாவின் ஹைதராபாத் பகுதியில் நிறுவப்பட்டது. இது இந்தியாவுக்காக இந்திய மக்களுக்காக அன்புடன் சேவை செய்யும் ஒரு இந்திய பிராண்ட்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

`நீயும் நானும் வேற இல்லடா' - இந்து ஜோடியின் திருமணத்திற்கு இடம்கொடுத்த முஸ்லிம் குடும்பம்

புனேயில் உள்ள வன்வோரி என்ற இடத்தில் திறந்தவெளி மைதானத்தில் சன்ஸ்ருதி மற்றும் நரேந்திரா தம்பதிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அதன் அருகில் இருந்த ஹாலில் முஸ்லிம் திருமண ஜோடிக்கு திருமண வரவ... மேலும் பார்க்க

Chhonzin Angmo: எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் 'பார்வை சவால்' கொண்ட இந்தியப் பெண்!

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான பார்வை சவால் கொண்ட சோன்சின் அங்மோ, மனஉறுதியோடு எவரெஸ்ட்டில் ஏறி இந்தியாவின் மூவர்ணக்கொடியை அதன் சிகரத்தில் நட்டுள்ளார். 'எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பார்வை சவால் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 3 நாள்களாக இடி, புயலுடன் கனமழை; 24 பேர் உயிரிழப்பு

பருவமழை வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மே மாதமே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 3 நாள்களாக இடி, புயலுடன் கூடிய கனமழை பெ... மேலும் பார்க்க

`கரப்பான் பூச்சி செல்லப்பிராணியா?'- தலையில் இருந்த பூச்சியை அகற்றிய பெண்; கொந்தளித்த சுற்றுலா பயணி!

சுற்றுலா பயணி ஒருவரின் தலையில் இருந்த கரப்பான் பூச்சியை அகற்றி உதவ முயன்ற பெண்ணிடம் அந்த சுற்றுலா பயணி ஆக்ரோஷப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தாய்லாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்ப... மேலும் பார்க்க

சென்னை: வண்ணக் கோலம் கொள்ளும் வள்ளுவர் கோட்டம்! புனரமைப்புப் பணிகள் தீவிரம் | Photo Album

கருணாநிதி 100: `பராசக்தி’ வசனம் முதல் வள்ளுவர் புகழ் வரை... கருணாநிதியும் தமிழும்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BI... மேலும் பார்க்க