செய்திகள் :

பயங்கரவாதத்தை நிறுத்தச் சொல்.. துருக்கிக்கு இந்தியா அழுத்தம்!

post image

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், பாகிஸ்தானுடன் நல்லுறவில் இருக்கும் துருக்கி வலியுறுத்த வேண்டும் என்று இந்தியா தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அண்டை நாட்டின் மீது எல்லைத் தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும், பல ஆண்டுகாலமாக பாகிஸ்தான் மண்ணிலிருந்து இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானை துருக்கி நிச்சயம் வலியுறுத்தும் என்று மத்திய வெளியுறவு விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கவலைகளை உணர்ந்துகொள்வதன் அடிப்படையில்தான் உறவுகள் உண்டாகின்றன என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

துருக்கியைச் சேர்ந்த நிறுவனம், நாட்டில் உள்ள 9 விமான நிலையங்களின் பாதுகாப்பு சேவைகளை வழங்கி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்தியாவில் உள்ள துருக்கி தூதரகம் மூலம் இந்த விவகாரம் பேசப்பட்டு வருகிறது என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது, பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இந்தியா - துருக்கி இடையேயான உறவு மோசமடைந்துள்ள நிலையில் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கேரளம்: பலத்த காற்றுக்கு பறந்து சாலையில் விழுந்த பெரிய இரும்பு கூரை

திருச்சூரில் பலத்த காற்றுக்கு பெரிய இரும்பு கூரை ஒன்று பறந்து சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருச்சூர் நகரில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது ... மேலும் பார்க்க

உ.பி.யில் மழை தொடர்பான சம்பவங்கள் 49 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 49 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மே 21-22 இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வானில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலினால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நில... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களுக்கு 25% வரி? டிரம்ப் அதிரடி!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்கக் கூடாதென அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஆப்பிள்... மேலும் பார்க்க

43 ஆண்டுகள் கழித்து 104 வயதில் விடுதலையான ஆயுள் தண்டனைக் கைதி!

உத்தரப் பிரதேசத்தில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதி ஒருவர் 43 ஆண்டுகள் கழித்து, தனது 104 வயதில் சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.கௌஷம்பி மாவட்டத்தின் கௌராயி கிராமத்தைச் சேர்ந்தவர் லங்கன் (வயது 1... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு இனி அதிக நாள்கள் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு!

பாகிஸ்தான் 75 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டது, இனி அதிக நாள்கள் இல்லை என உத்தரப் பிரதேச முதல்வர் பேசியுள்ளார். அயோத்தியில் ஹனுமான் கதா மண்டபத்தை இன்று (மே 23) திறந்து வைத்தபின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க